கவிஞர் கொண்டாடிய கவிஞர் தினம்
200 புறாக்கள்...10 குருவிகள்...13 வயது சிறுமி...ஒரு திருமணம்
இஸ்லாமாபாத்:
200 புறாக்களும், 10 குருவிகளையும் வாங்கிக்கொண்டு தனது இரண்டாவது மகளை 35 வயது வாலிபருக்குத்திருமணம் செய்து கொடுத்தார் ஒரு "பாசமிகு தந்தை.
இந்தத் தந்தை பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் உள்ள தார்கி பகுதியைச் சேர்ந்தவர். அவரது பெயர் மோமின்அலி. இவர், தனது மகளுக்கு சமீபத்தில் திருமணம் செய்து வைத்தார். மணப் பெண்ணுக்கு வயது 13. அதை விடகொடுமை, மணமகனின் வயது 35.
திருமணத்திற்காக மொமினுக்கு மணமகன் வீட்டார் கொடுத்த சீர் என்ன தெரியுமா? 200 புறாக்களும், 10குருவிகளும். மகிழ்ச்சியாக இதை வாங்கிக்கொண்டு மகளைத் திருமணம் செய்து வைத்துள்ளார் மொமின்.
மோமின் அலி குறித்துக் தார்கி கிராமத்தினர் கூறுகையில், மொமின் அலி ஏற்கனவே 4 வேட்டை நாய்களைவாங்கிக்கொண்டு தனது மூத்த மகளைத் திருமணம் செய்து கொடுத்ததாகக் கூறினர்.
யு.என்.ஐ.