தமிழகத்தில் இன்று
காஷ்மீர் தீவிரவாதிகளின் தலைமையிடம் பாகிஸ்தான்....ஒப்புக் கொள்கிறது அமெரிக்கா
வாஷிங்டன்:
காஷ்மீரில் இயங்கி வரும் பல தீவிரவாத அமைப்புகளின் தலைமையிடம் பாகிஸ்தானில்தான் உள்ளது என்று அமெரிக்க வெளியுறவுத் துறையின்பயங்காரவாதத் தடுப்புப் பிரிவு ஒருங்கிணைப்பாளர் மைக்கேல் ஷீஹான் கூறியுள்ளார்.
தெற்காசியாவில் பயங்ரவாதம் என்ற தலைப்பில் அமெரிக்க நாடாளுமன்றத்தில் அவர் பேசுகையில், தீவிரவாதிகள் தனது நாட்டிற்குள் சுதந்திரமாகநடமாடுவதற்கு பாகிஸ்தான் அனுமதி அளித்துள்ளது. இந்தியாவில் வன்முறையில் ஈடுபடும் இந்தத் தீவிரவாதிகள், பாகிஸ்தானைத்தான் தங்களது தளமாகக்கொண்டுள்ளார்கள்.
காஷ்மீர் தீவிரவாதிகளுக்கு ஆதரவு தருவதும்,ஆயுதம் தருவதும் தனது தார்மீக கடமை என்று பாகிஸ்தான பலமுறை கூறியுள்ளது. தொடர்ந்து அதைவலியுறுத்தி வருகிறது.
தீவிரவாதிகளுக்குப் பாகிஸ்தான் உதவி வருவது குறித்து அமெரிக்காவுக்குத் தொடர்ந்து தகவல் வந்து கொண்டுள்ளது. இதை அமெரிக்கா மனதில்கொண்டுள்ளது என்றார் அவர்.












Click it and Unblock the Notifications