தமிழகத்தில் இன்று
சாம்பியன் ஆவாரா ஆனந்த்?
டார்ட்மண்ட் (ஜெர்மனி):
ஜெர்மனியில் நடைபெற்று வரும் ஸ்பார்கஸன் செஸ் போட்டியில் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த் சாம்பியன் பட்டம் வெல்வதற்கு நெருக்கடிகள்அதிகரித்துள்ளன.
ஹங்கேரி நாட்டின் பீட்டர் லேகோவுடனான 8-வது சுற்றில் அவர் டிரா கண்டார். இதையடுத்து அவர் மொத்தம் 5 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில்உள்ளார்.
ரஷ்யாவின் விளாடிமிர் கிராம்னிக் 5.5 புள்ளிகளுடன் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார். இன்னும் ஒரு சுற்று ஆட்டம் எஞ்சியுள்ளது. அந்த சுற்றில்,ஜெர்மனியின் ராபர்ட் ஹப்னரை ஆனந்த் சந்திக்கிறார்.
கிராம்னிக் அடுத்து உலக சாம்பியன் அலெக்சாண்டர் காலிஃப்மென்னுடன் மோதுகிறார். இந்த செஸ் போட்டியில் ஆனந்த் பட்டம் வெல்வதுகாலிஃப்மென் கையில்தான் உள்ளது.
கிராம்னிக்குடனான மோதலில் காலிஃப்மென் டிராவோ அல்லது வெற்றியோ பெறவேண்டும். இதே போல, ஹப்னரை ஆன்ந்த் வெல்லவேண்டும்.இது இரண்டும் நடந்தால்தான் ஆனந்த் சாம்பியன் ஆக முடியும்.
காலிஃப்பென்னுடன், கிராம்னிக் டிரா செய்தாலே போதும். அவருக்கு சாம்பியன் பட்டம் வசமாகும். கடைசி சுற்று ஆட்டத்தில் ஆனந்த் வென்றால்,அவரும் கிராம்னிக்கும் சேர்ந்து சாம்பியனாக அறிவிக்கப்படுவர்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications