தமிழகத்தில் இன்று
காஷ்மீரில் 6 மாதத்தில் 663 தீவிரவாதிகள் பலி
ஜம்மு:
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் 2000-ம் ஆண்டில் முதல் 6 மாதத்தில் இதுவரை 663 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். தீவிரவாதிகளிடமிருந்துஏராளமான வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
தீவிரவாதத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாதிகளை ஒடுக்கும் நடவடிக்கையில் பாதுகாப்புப் படையினர்தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பல பகுதிகளில் பாதுகாப்புப் படையினர் மேற்கொண்ட பாதுகாப்பு மற்றும் தேடுதல் வேட்டைகளின்போது தீவிரவாதிகள்சுட்டுக் கொல்லப்பட்டனர். தீவிரவாதிகளின் தாக்குதல்களில் பாதுகாப்புப் படையினரும் கொல்லப்பட்டன்.
தீவிரவாதிகளுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே நடந்த மோதல்களில் பொது மக்களில் 361 பேரும் இறந்துள்ளனர்.
இந்த ஆண்டு ஜனவரி 1-ம் தேதி முதல் ஜூன் 30-ம் தேதி வரை பாதுகாப்புப் படையினரின் தாக்குதலில் 663 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர்.இவர்களில் 170 பேர் பாகிஸ்தான் உள்ளிட்ட அண்டை நாடுகளைச் சேர்ந்த தீவிரவாதிகள் என்பது குறிப்பிடத்தக்கது.
தீவிரவாதிகளின் தாக்குதலில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த 132 பேர் இறந்தனர்.
தீவிரவாதிகளிடமிருந்து 647 துப்பாக்கிகள், 192 கைத் துப்பாக்கிகள், 125 ராக்கெட் செலுத்தும் கருவிகள், 2264 கையெறி குண்டுகள், 1271வெடிகுண்டுகள், 505 கிலோ ஆர்.டி.எக்ஸ். வெடிபொருள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.
யு.என்.ஐ.