For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழகத்தில் இன்று

By Staff
Google Oneindia Tamil News

காதல் தோல்வியால் ஏட்டு விஷம் குடித்துத் தற்கொலை

சென்னை:

சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் போலீஸ் ஏட்டு ஒருவர் விஷம் குடித்துத்தற்கொலை செய்து கொண்டார்.

சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் டிரைவராக பணிபுரிந்து வந்தவர்ஜெயச்சந்திரன் (31). இவர் விழுப்புரம் மாவட்டம் தர்மசத்திரம் என்ற ஊரைச்சேர்ந்தவர். சென்னைக்கு அருகிலுள்ள ஆவடியில், தமிழ்நாடு சிறப்புக் காவல் படைப்பிரிவில் ஏட்டாக பணிபுரிந்து வந்தார். சில நாட்களுக்கு முன்பு சென்னை போலீஸ்கமிஷனர் அலுவலகத்துக்கு டிரைவராக பணி மாற்றம் செய்யப்பட்டார்.

வெள்ளிக் கிழமையன்று டிரைவர்கள் ஓய்வு எடுப்பதற்கென ஒதுக்கப்பட்டுள்ளஓய்விடத்தில் ஜெயச்சந்திரன் வாயில் நுரை தள்ளிய நிலையில் மயக்கமாக இருந்தார்.

உடனே மற்ற போலீசார் அவரை சென்னை பொது மருத்துவமனைக்கு எடுத்துச்சென்றனர். அங்கு அவர் சிகிச்சை பலனளிக்காமல் இறந்தார்.

ஜெயச்சந்திரன் இன்னும் மணமாகாதவர். காதல் தோல்வி கூட இந்த தற்கொலைக்குக்காரணமாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X