தமிழகத்தில் இன்று
அஸ்ஸாமில் தீவிரவாதிகள் சுட்டு 6 பேர் பலி
கவுஹாத்தி:
அஸ்ஸாமில் தீவிரவாதிகளின் தாக்குதலில் 6 பேர் கொல்லப்பட்டனர்.
கார்பி அன்ங்லாங் மாவட்டத்தில் உள்ள செசா பதார் கிராமத்துக்குள் புகுந்த தீவிரவாதக் கும்பல் ஒன்று பொதுமக்கள் மீது கண்மூடித்தனமாகச்சுட்டனர். இந்த திடீர் தாக்குதலில் சம்பவ இடத்திலேயே 5 பேர் இறந்தனர்.
காக்ராஜ்ஹார் மாவட்டத்தில் போடோ தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டார்.
சம்பவ இடங்களுக்கு உயர் போலீஸ் அதிகாரிகள் நேரில் சென்றுள்ளனர். கார்பி அன்ங்லாங், காக்ராஜ்ஹார் மாவட்டங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்புபோடப்பட்டுள்ளது.
அஸ்ஸாமில் கடந்த நான்கு நாட்களாக தீவிரவாதிகள் நடத்தி வரும் தாக்குதலுக்கு இதுவரை 26 பேர் பலியாகியுள்ளனர்.
அஸ்ஸாமில் தொடர்ந்து நடந்து வரும் தீவிரவாதிகள் தாக்குதலுக்கு முதல்வர் ஃப்ரபல்ல குமார் மஹந்தா கண்டனம் தெரிவித்துள்ளார். தீவிரவாதிகளின்நடவடிக்கைகளைத் தடுத்து நிறுத்தும்படி போலீஸாருக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications