தமிழகத்தில் இன்று
மேற்காசிய அமைதிப் பேச்சில் கிளின்டன் மும்முரம் - ஜப்பான் பயணம் தாமதம்
துர்மாண்ட்:
மேற்காசிய அமைதிப் பேச்சைத் தொடர அமெரிக்க அதிபர் பில் கிளின்டன் முடிவுசெய்துள்ளதை அடுத்து அவரது ஜப்பான் பயணம் ஒரு நாள் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேலுக்கும் பாலஸ்தீன விடுதலை இயக்கத்துக்கும் இடையே ஏற்பட்டுள்ளபிரச்சினையைத் தீர்க மேற்காசிய அமைதிப் பேச்சுவார்த்தை அமெரிக்காவில்நடைபெற்று வருகிறது.
இஸ்ரேல் அதிபர் யுத் பாராக் மற்றும் பாலஸ்தீன விடுதலை இயக்கத் தலைவர் யாசர்அராபத் ஆகியோருடன் கேம்ப் டேவிட் என்ற இடத்தில் கிளின்டன் அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறார்.
கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வரும் இப் பேச்சு வார்த்தையின் முடிவில்பிரச்சினைக்குத் தீர்வு காணும் முயற்சியில் கிளின்டன் ஈடுபட்டுள்ளார். அதற்காகபுதன்கிழமையும் பேச்சுவார்த்தையைத் தொடர அவர் முடிவு செய்துள்ளார்.
இதையடுத்து ஜப்பானில் ஒகினாவாவில் நடைபெறும் ஜி-8 உச்சி மாநாட்டில் அவர்கலந்து கொள்வது ஒருநாள் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இத் தகவலை அமெரிக்கஅதிபரின் வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
அமைதிப் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டுவிட்டு வியாழக்கிழமை காலைஉச்சிமாநாட்டின் துவக்க நிகழ்ச்சியில் அவர் கலந்து கொள்வார் என்று வெள்ளைமாளிகை செய்தித் துறைச் செயலர் லாக்ஹார்ட் தெரிவித்தார்.
கிளின்டனின் இந்த திடீர் பயண மாற்றத்தால் டோக்கியோவில் ஜப்பான் பிரதமர்யோஷிரோ மோரியுடன் புதன்கிழமை நடைபெற இருந்த சந்திப்பு ரத்துசெய்யப்பட்டுவிட்டது.
யு.என்.ஐ.