For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழகத்தில் இன்று

By Staff
Google Oneindia Tamil News

பிஜியில் புதிய அரசுக்கு ஜார்ஜ் ஸ்பீட் எதிர்ப்பு - பதவியேற்பு ஒத்திவைப்பு

வெலிங்டன்:

புரட்சிப் படைத் தலைவர் ஜார்ஜ் ஸ்பீட் எதிர்ப்பை அடுத்து பிஜியில் புதிய அரசுபதவியேற்பு ஒத்திவைக்கப்பட்டது.

பிஜியில் இந்திய வம்சாவளிப் பிரதமர் மகேந்திர சவுத்ரி தலைமையில் ஆட்சிநடைபெற்று வந்தது. கடந்த மே 19-ம் தேதி ஜார்ஜ் ஸ்பீட் தலைமையில் நாடாளுமன்றக்கட்டடத்துக்குள் நுழைந்த புரட்சிப் படையினர் பிரதமர் உள்பட பலரைப் பிணைக்கைதிகளாகப் பிடித்து வைத்துக் கொண்டனர்.

அதன் பிறகு பிஜியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. ராணுவத்தின் கையில் ஆட்சி வந்தது.புரட்சிப் படையினருடன் ராணுவம் பேச்சு வார்த்தை நடத்தியது.

பிஜியில் பிஜி நாட்டவர்களைக் கொண்ட புதிய இடைக்கால அரசு ஏற்படுத்தவேண்டும்என்று புரட்சிப் படையினர் கோரிக்கை விடுத்தனர். அதன்படி முன்னாள் அதிபர் ராதுஜோசபா ஐலாய்லோ தலைமையில் புதிய அரசு ஏற்படுத்தப்பட்டது.

இதையடுத்து கடைசியாகப் பிடித்து வைத்திருந்த பிரதமர் மகேந்திர சவுத்ரி உள்பட 18பேரையும் கடந்த வாரம் பிணைக் கைதிகள் விடுவித்தனர்.

ஐலாய்லோ தலைமையிலான அரசில் தனது ஆதரவாளர்கள் இடம் பெறவேண்டும்என்று கூறிய ஜார்ஜ் ஸ்பீட் 21 பேருடைய பெயர்களை அறிவித்தார்.

இந் நிலையில், ஐலாய்லோ செவ்வாய்க்கிழமை புதிய அதிபராகப் பதவியேற்றுக்கொண்டார். அவரது தலைமையிலான அரசு புதன்கிழமை பதவியேற்க இருந்தது.

ஆனால், புதன்கிழமை காலை நடைபெற இருந்த புதிய அரசு பதவியேற்புஒத்திவைக்கப்பட்டது. புதிய அரசுக்கு புரட்சிப் படைத் தலைவர் ஜார்ஜ் ஸ்பீட்எதிர்ப்புத் தெரிவித்ததை அடுத்து பதவியேற்பு ஒத்திவைக்கப்பட்டது.

ஐலாய்லோ தலைமையில் 22 கேபினட் அமைச்சர்கள் 12 உதவி அமைச்சர்கள் இடம்பெறுவார்கள் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதில் 21 பேர் தனது ஆதரவாளர்களாகஇருக்கவேண்டும் என்று ஜார்ஜ் ஸ்பீட் கூறியிருந்தார். ஆனால், 4 பேரை மட்டும் புதியஅரசில் ஐலாய்லோ சேர்த்துக் கொண்டார்.

இதையடுத்து தனது எதிர்ப்பை ஜார்ஜ் ஸ்பீட் தெரிவித்துள்ளார். பிரதமர் பதவிக்குஜார்ஜ் ஸ்பீட் பரிந்துரை செய்திருந்த ராது எபெலி கனாய்மாவிக்கு எந்தப் பதவியும்தரப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய அரசில் தனது ஆதரவாளர்கள் அதிகம் பேர் சேர்த்துக் கொள்ளாததற்கு எதிர்ப்புத்தெரிவித்துள்ள ஜார்ஜ் ஸ்பீட் அரசுக்கு கடும் எச்சரிக்கையை விடுத்துள்ளார். விரைவில்நாடு முழுவதும் தனது ஆதரவாளர்கள் தங்களது எதிர்ப்பைக் காட்டுவார்கள் என்றுஅவர் கூறியுள்ளார்.

இந் நிலையில், பிஜி நாட்டுக்கான தனது தூதர்களை ஆஸ்திரேலியா, நியுசிலாந்து,அமெரிக்கா, பிரிட்டன் ஆகிய நாடுகள் விலக்கிக் கொண்டுவிட்டன.

பிஜியில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடியை அடுத்து இந் நடவடிக்கையை அந்நாடுகள் மேற்கொண்டுள்ளன.

யு.என்.ஐ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X