For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழகத்தில் இன்று

By Staff
Google Oneindia Tamil News

"ஒரே நாள், ஒரே நேரம், ஒரே தெருவில் 3 வீடுகள் வாங்கிய சசிகலா"

சென்னை:

தஞ்சாவூரில் ஒரே நாளில், ஒரே நேரத்தில் ஒரே தெருவில் 3 வீடுகளை சசிகலாவாங்கினார் என்று தமிழக பத்திரப் பதிவுத் துறையைச் சேர்ந்த மாவட்டப் பதிவாளர்நிஜாமுதீன் சாட்சியம் அளித்தார்.

ஜெயலலிதா மற்றும் சசிகலா ஆகியோர் மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்துசேர்த்த வழக்கு சென்னை சிறப்பு நீதிமன்றத்தில விசாரிக்கப்பட்டு வருகிறது.புதன்கிழமை நடைபெற்ற விசாரணையின்போது நிஜாமுதீன் அளித்த சாட்சியம்:

1992-ம் ஆண்டு தஞ்சாவூர் மாவட்ட பத்திரப் பதிவாளராகப் பணியாற்றினேன்.அப்போது தஞ்சாவூரில் ஒரே நாளில், ஒரே நேரத்தில், ஒரே தெருவில் 3 வீடுகளைகாலிமனையுடன் சேர்த்து சசிகலா வாங்கினார்.

சசி என்டர்பிரைசஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் என்ற பெயரில் அந்தநிறுவனத்துக்காக அச் சொத்துக்களை வாங்கியதாக பத்திரப்பதிவின்போது அவர்கூறினார்.

தஞ்சாவூரில் உள்ள நோன்புச் சாவடித் தெருவில் வசித்த சோமசுந்தரம் வீட்டை ரூ.1.39லட்சத்துக்கும், லோகநாதன் என்பவரது வீடு மற்றும் காலி மனையை ரூ.1.02லட்சத்துக்கும், முத்துலட்சுமி என்பவரது வீடு மற்றும் காலி மனையை ரூ.1.79லட்சத்துக்கும் சசிகலா வாங்கினார்.

மொத்தம் ரூ.4.20 லட்சத்துக்கு அந்த வீடுகளையும் காலி மனைகளையும் சசிகலாவாங்கினார் என்றார் நிஜாமுதீன்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X