தமிழகத்தில் இன்று
முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சினை: பா.ம.க. ஆர்ப்பாட்டம்
மதுரை:
முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சினை தொடர்பாக மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் எதிரே பாட்டாளி மக்கள் கட்சித் தொண்டர்கள்செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தமிழகம் மற்றும் கேரள மாநில எல்லைப் பகுதியில் உள்ள முல்லைப் பெரியாறுஅணையில் தேக்கி வைக்கப்படும் நீரின் அளவை 136 அடியிலிருந்து 152 அடியாகஉயர்த்தவேண்டும்.
இது தொடர்பாக மத்திய அரசும் தமிழக அரசும் உடனடியாக பேசி இப் பிரச்சினைக்குத்தீர்வு காணவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம்நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் 200-க்கும் அதிகமான பாட்டாளி மக்கள் கட்சித் தொண்டர்கள்கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் முடிவில் மாவட்ட ஆட்சித் தலைவரிடம்கோரிக்கை மனு சமர்ப்பிக்கப்பட்டது.
முன்னதாக பாட்டாளி மக்கள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் முருகவேல்ராஜன் தலைமையில் ஊர்வலம் நடைபெற்றது. அதில் கேரள அரசுக்கு எதிரானகோஷங்கள் எழுப்பப்பட்டன.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications