தமிழகத்தில் இன்று
சுரேஷ் பிரபுவின் ராஜினாமாவை நிராகரித்தார் பிரதமர் வாஜ்பாய்
டெல்லி:
மத்திய ரசாயனம் மற்றும் உரத் துறை அமைச்சர் சுரேஷ் பிரபுவின் ராஜினாமாவை ஏற்கபிரதமர் வாஜ்பாய் மறுத்துவிட்டார்.
மும்பையில் சில ஆண்டுகளுக்கு முன் நடந்த இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும்இடையே நடந்த மோதல் தொடர்பாக தனது பத்திரிக்கையில் தலையங்கம்எழுதியிருந்தார் சிவசேனைத் தலைவர் பால் தாக்கரே.
இம் மோதல் தொடர்பான விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில்,பால் தாக்கரே மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்த மகாராஷ்டிர அரசு முடிவுசெய்துள்ளது.
இதை எதிர்த்து சிவசேனைக் கட்சி சார்பில் வெற்றி பெற்று மத்திய அமைச்சராக உள்ளசுரேஷ் பிரபு தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.
மகாராஷ்டிர அரசின் முடிவு வெளியான உடனேயே, அன்றைய தினம் நடந்தஅமைச்சரவைக் கூட்டத்தில் கூட கலந்து கொள்ளாமல் பிரதமர் வாஜ்பாயைநேரடியாகச் சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை சுரேஷ் பிரபு சமர்ப்பித்தார்.
அந்த ராஜினாமா கடிதத்தை வாஜ்பாய் புதன்கிழமை நிராகரித்துவிட்டதாக பிரதமர்அலுவலக செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
யு.என்.ஐ.