தமிழகத்தில் இன்று
தமிழ் சின்னத் திரையில் கொடிகட்டிப் பறக்கும் இளம் நட்சத்திரம். மணியான இயக்குனரின் இயகத்தில், கதாநாயகிக்கு அக்காவாக நடித்தவர். நல்ல நடிகைதான்.
ஒரு படத்திற்குப் பிறகு தனக்கு அலையலையாக சினிமாபடவாய்ப்புகள் வரும் என்று எதிர்பார்த்தார். ஆனால், அப்படி ஏதும் நடக்கவில்லை. சரி போங்கப்பாஎன்று சின்னத் திரையிலேயே மின்னிக் கொண்டிருக்கிறார்.
தற்பொழுது அவர் நகைச்சுவை பெயர் கொண்ட டைட்டிலில் வந்து கொண்டிருக்கும் சீரியலில் படு பிஸி. இந்த தொடரில் நடிகையின் காதலனாகவும்,கதாநாயகனாகவும் நடிக்கும், இளம் நடிகரின் மீது நட்பு அதிகமாகி அது காதலாகிவிட்டது என்கிறார்கள் சின்னத்திரை உலகில்.
பதினாறு வயதினிலே.. அடுத்து காதல் ஒவியம்..
அப்பா பாரதிராஜாவின் முதல் படமான "பதினாறு வயதினிலே" தலைப்பையே தன் முதல் இசை ஆல்பத்திற்கு பெயராக வைத்து, அதில் மீனாவையும்பாட வைத்தார் மனோஜ்குமார்.
இவரது அடுத்த இசை ஆல்பத்திற்கு "காதல் ஒவியம்" என்று பெயர் வைத்திருக்கிறார். எந்த நடிகையை பாடவைப்பது என்பது மட்டும் இன்னும்முடிவாகவில்லை.
தங்க கொலுசு நடிகைகள்...
நடிகைகளில், மீனா, தேவயானி, ஊர்வசி, குஷ்பூ, ஆகியோர் காலில் தங்கக் கொலுசு போட்டுக்கொள்கிறார்கள்.
நடிக்க வருகிறார் "மீசை" தேவாரம்
சுஜாதா, பிரபல வாரப்பத்திரிகையில் எழுதிய "பூக்குட்டி" என்ற தொடர்கதை "நிலாக் காலம்" என்கிற பெயரில் படமாகப் போகிறது.
ரோஜாதான் கதாநாயகி.இவர் இந்தக் கதையில் ஒரு நடிகை கதாபாத்திரத்திலேயே நடிக்கிறார். முன்னாள் தமிழக டி.ஜி.பி. தேவாரமும் இந்தப் படத்தில்நடிக்கிறார்.என்ன வேஷம் தெரியுமா?. காவல்துறை அதிகாரியாகவே தான்.
டைரக்டர் ஷங்கரிடம் உதவியாளராக இருந்த காந்தி கிருஷ்ணாதான் இந்த படத்தை இயக்குகிறார்.ஏற்கனவே அரவிந்த்சாமி, மாதுரி தீட்சித் நடிக்க"இன்ஜினியர்" என்ற படத்தை இயக்கி வந்தார். படம் எண்பது சதவீதம் முடிந்து அதற்கு மேல் தொடரமுடியாமல் பல பிரச்சனைகளில் சிக்கிக்கிடக்கிறது.
"நிலாக் காலம்" தான் காந்தி கிருஷ்ணாவுக்கு நல்ல காலத்தை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.












Click it and Unblock the Notifications