தமிழகத்தில் இன்று
Subscribe to Oneindia Tamil
பெட்ரோலியத் துறையில் இணைந்து செயல்பட இந்தியா-இந்தோனேஷியா ஒப்பந்தம்
ஜகார்த்தா:
பெட்ரோலியத் துறையில் இணைந்து செயல்பட இந்தியாவும், இந்தோனேஷியாவும்முடிவு செய்துள்ளன. இது தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையேயான ஒப்பந்தம்கையெழுத்தானது.
இந்தியன் ஆயில் நிறுவனத் தலைவர் எம்.ஏ. பதான், இந்தோனேஷியாவில் உள்ளபெர்தாமினா தேசிய எண்ணெய் நிறுவனத்தின் தலைவர் பெய்ஹாகி ஹகீம் இருவரும்அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
இந்த ஒப்பந்தப்படி எண்ணெய் கிணறுகள் தோண்டுதல், பெட்ரோல் உற்பத்தி செய்வதுபோன்ற பணிகளில் இரு நாடுகளும் இணைந்து செயல்படும்.
மேலும் எண்ணெய் சுத்திகரிப்பு, தகவல் தொழில்நுட்பம், பெட்ரோலியப் பொருட்கள்விற்பனை, விற்பனை மேம்பாடு, பயிற்சி, ஆலோசனை மற்றும் ஹைட்ரோகார்பன்துறையிலும் இரு நாடுகளும் இணைந்து செயல்படும்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications