For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழகத்தில் இன்று

By Staff
Google Oneindia Tamil News

27-ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக சசிகலாவுக்கு நீதிபதி உத்தரவு

சென்னை:

வருமானத்துக்கு சொத்து சேர்த்த வழக்கில் வரும் 27-ம் தேதி சசிகலா கண்டிப்பாகநீதிமன்றத்தில் ஆஜராகவேண்டும் என்று தனி நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, மாஜி வளர்ப்பு மகன்சுதாகரன் ஆகியோர் மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்குமுதலாவது சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

வெள்ளிக்கிழமை நடைபெற்ற விசாரணையின் போது சுதாகரன் திருமணத்தில் சமையல்பணிகளை கவனித்த சமையல்காரர் தியாகராஜசாமி என்பவர் சாட்சியம் அளித்தார்.

அவர் அளித்த சாட்சியம் வருமாறு:

1995-ம் ஆண்டு நடந்த சுதாகரன் திருமணத்தில் வி.ஐ.பி.க்கள் சாப்பிடுவதற்கான மதியசாப்பாடு மட்டும் நான் தயார் செய்து கொடுத்தேன். இப்பணியில் எனக்கு உதவியாக22 சமையல் பணியாளர்கள் ஈடுபட்டனர்.

எனக்கு மட்டும் சம்பளமாக 11,850 ரூபாயைப் பணமாக கொடுத்தனர். காரட் அல்வாஉள்பட மூன்று வகை ஸ்வீட், தயிர் பச்சடி, இஞ்சி பச்சடி, வடை, அப்பளம், பாயசம்,ரசம், பருப்பு, சாம்பார் ஆகிய உணவுகளைச் சமைத்துக் கொடுத்தேன்.

இதற்காக 6 மூட்டை அரிசி, 150 கிலோ காய்கறிகள் வாங்கப்பட்டன. 2 ஆயிரம்வி.ஐ.பி.க்கள் சாப்பிட்டனர் என்றார் அவர்.

அவரைத் தொடர்ந்து மேலும் இரு சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். விசாரணைமுடிந்ததும் அரசு தரப்பு வக்கீல் சோமசுந்தரம் பேசினார்.

இந்த வழக்கில் இரண்டாவது குற்றவாளி சசிகலா. அவர் தொடர்ந்து ஆஜராவதில்லை.முதல் குற்றவாளியான ஜெயலலிதா வந்தால் அவரும் வருகிறார். அவர் வரவில்லைஎன்றால் இவரும் வருவதில்லை.

நீதிமன்றத்துக்கு வராமல் இருக்க சசிகலாவுக்கு எந்த விசேஷ அனுமதியும் இல்லை.நீதிமன்றத்தில் ஆஜராக சசிகலாவுக்கு உத்தரவிடவேண்டும் என்று கூறினார்.

அதற்கு ஜெயலலிதா தரப்பு வக்கீல்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். சசிகலா வருவதால்விசாரணையில் ஒரு பலனும் ஏற்படப் போவதில்லை என்று அவர்கள் கூறினர்.

இதையடுத்து இவ் வழக்கு விசாரணையை 27-ம் தேதிக்குத் தள்ளிவைத்த நீதிபதிஆறுமுகப் பெருமாள் ஆதித்தன், அன்றைய தினம் நீதிமன்றத்தில் சசிகலா கண்டிப்பாகஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டார்.

தற்போது ஜெயலலிதாவுடன் ஹைதராபாத் சென்றுள்ள சசிகலா, அடுத்த மாதம் 20-ம்தேதி வாக்கில் திரும்பும் திட்டத்தில் இருந்தார்.

ஆனால், நீதிமன்ற உத்தரவை அடுத்து அவர் 27-ம் தேதி சென்னை திரும்ப வேண்டியகட்டாயம் ஏற்பட்டுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X