தமிழகத்தில் இன்று
இனி ரேஷன் கடையிலும் உப்பு, சோப்பு, பேஸ்ட் கிடைக்கும்
டெல்லி:
நாடு முழுவதும் உள்ள ரேஷன் கடைகளில் வழக்கமாக விநியோகிக்கப்படும் அரசி, கோதுமை, மண்ணெண்ணெய் போன்ற பொருட்களுடன் இனி உப்பு,சோப்பு, சமையல் எண்ணெய் உள்ளிட்ட 11 அத்தியாவசிப் பொருட்களும் நியாயவிலையில் விற்கப்படும்.
இத் தகவலை மத்திய நுகர்வோர் நலன் மற்றும் பொது விநியோகத் துறை அமைச்சர் சாந்தகுமார் தெரிவித்தார். இது குறித்து நிருபர்களிடம் அவர் மேலும்கூறியதாவது:
நாடு முழுவதும் 4.5 லட்சம் ரேஷன் கடைகள் உள்ளன. இவற்றின் மூலம் மக்களுக்கு அரிசி, கோதுமை, மண்ணெண்ணெய், சர்க்கரை போன்றஅத்தியாவசியப் பொருட்கள் குறைந்த விலையில் விநியோகிக்கப்படுகின்றன.
இனி தேயிலை, சமையல் எண்ணெய், பருப்பு வகைகள், சோப்புகள், சோப்புக்கள் உள்பட 11 அத்தியாவசியப் பொருட்கள் வெளிச் சந்தை விலையை விடகுறைவான விலையில் ரேஷன் கடையில் விற்கப்படும்.
இந்தியாவில் வறுமைக் கோட்டுக்குக் கீழே 32 கோடிக்கும் அதிகமானவர்கள் வாழ்கின்றனர். இவர்களது நலனுக்காக, "சாரவ்பிரியா" என்றஇப் புதிய திட்டம் செயல்படுத்தப்படுகிறது என்றார் சாந்தகுமார்.
யு.என்.ஐ.