தமிழகத்தில் இன்று
உடுமலை குண்டு வெடிப்பு வழக்கு ஒத்திவைப்பு
கோவை:
உடுமலை குண்டு வெடிப்பு வழக்கில் குற்றச்சாட்டுப் பதிவு வரும் 25-ம் தேதிக்குஒத்திவைக்கப்பட்டது.
கோவை மாவட்டம் உடுமலைப்பேட்டையில் நடந்த குண்டு வெடிப்பு தொடர்புசம்பவம் தொடர்பாக 10 பேர் கைது செய்யப்பட்டனர்.
இது தொடர்பான வழக்கு விசாரணை கோவை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந் நிலையில், கைது செய்யப்பட்டவர்களில் ரியாஸ் ரகுமான் என்பவர் அப்ரூவராகமாறியதால், வழக்கு விசாரணையயில் திருப்பம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து இவ் வழக்கில் குற்றச்சாட்டு பதிவு வரும் 25-ம் தேதிக்குஒத்திவைக்கப்பட்டுள்ளது.
பாட்ஷாவுக்கு பல் வலி:
கோவை குண்டு வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு கோவை சிறையில்அடைக்கப்பட்டுள்ள அல் உம்மா இயக்கத் தலைவர் பாஷாவுக்கு திடீரென்று பல் வலிஏற்பட்டது.
இதையடுத்து கோவை அரசு மருத்துவமனையில் அவருக்குச் சிகிச்சைஅளிக்கப்பட்டது. இதையடுத்து மருத்துவமனைக்குப் பலத்த பாதுகாப்புபோடப்பட்டது.












Click it and Unblock the Notifications