தமிழகத்தில் இன்று
வெகுவாகக் குறைந்தது இந்திய ரூபாயின் மதிப்பு
மும்பை:
அமெரிக்க டாலருக்கு எதிராக இந்திய ரூபாயின் மதிப்பு வெகுவாகக் குறைந்தது.வெள்ளிக்கிழமை நிலவரப்படி ஒரு அமெரிக்க டாலருக்கு எதிராக இந்திய ரூபாயின்மதிப்பு 45.07 ஆக இருந்தது.
முதன்முறையாக இந்திய ரூபாயின் மதிப்பு 45 ரூபாய் என்ற அளவைக் கடந்துள்ளது.ஒரே நேரத்தில் திடீரென்று இந்திய ரூபாயின் மதிப்பு 12 பைசா குறைந்துள்ளது என்பதுகுறிப்பிடத்தக்கது.
வெள்ளிக்கிழமை காலை அன்னியச் செலவாணி மார்க்கெட் துவங்கியபோது இந்தியரூபாயின் மதிப்பு டாலருக்கு ரூ.44.89 ஆக இருந்தது.
ஆனால், தொழில் நிறுவனங்களும், வெளிநாட்டு வங்கிகளும் அதிக அளவில்அமெரிக்க டாலர்களை வாங்கத் தொடங்கின.
இதையடுத்து டாலருக்கு எதிராக இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்தது. எப்போதும்இல்லாத அளவுக்கு ரூ.45.07 என்ற அளவுக்கு இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்தது.
இருப்பினும் பாரத ஸ்டேட் வங்கி ரூ.44.91-க்கே அமெரிக்க டாலரை மாற்றி வருகிறது.ஆனால், இந்த நடவடிக்கையை தொடர்ந்து மேற்கொள்ளமுடியாது என்று மார்க்கெட்வட்டாரங்கள் தெரிவித்தன.
அதே நேரத்தில் மத்திய ரிசர்வ் வங்கி டாலருக்கு எதிராக ரூபாயின் மதிப்பை ரூ.45.02ஆக நிர்ணயித்துள்ளது. வியாழக்கிழமை ரூபாயின் மதிப்பு ரூ. 44.82 ஆக இருந்ததுகுறிப்பிடத்தக்கது.
யு.என்.ஐ.