தமிழகத்தில் இன்று
Subscribe to Oneindia Tamil
வியட்நாமில் நிலச்சரிவுகளுக்கு 20 பேர் பலி
ஹானோய்:
வியட்நாமின் வட பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவுகளில் 7 குழந்தைகள் உள்பட 20 பேர்இறந்தனர்.
வியட்நாமில் கடந்த சில நாட்களாகப் பலத்த மழை பெய்து வருகிறது. இதையடுத்துநாட்டின் பல பகுதிகளில் நிலச்சரிவுகள் ஏற்பட்டு வருகின்றன.
கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் இதுவரை 7 குழந்தைகள் உள்பட 20 பேர்இறந்துள்ளனர். 22 பேர் காயமடைந்துள்ளனர். 38 வீடுகளும், 13 கிலோமீட்டர் நீளச்சாலைகளும் சேதமடைந்துள்ளன.
தொடர்ந்து பலத்த மழை பெய்து வருவதால் வியட்நாமின் முக்கிய சுற்றுலாத் தளமானசபா மாவட்டத்தில் நிலச்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து அங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.சுற்றுலாப் பயணிகள் அங்கு அனுப்பப்படுவதில்லை. உள்ளூர் மக்களும்பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications