தமிழகத்தில் இன்று
போட்டா போட்டியில் இந்திய செல்போன் நிறுவனங்கள்
மும்பை:
இந்தியாவில் செல்போன் சேவை அளிக்கும் நடவடிக்கையில் முழு வீச்சில் ஈடுபட பல நிறுவனங்கள் போட்டா போட்டியில் ஈடுபட்டுள்ளன.
தொலைத் தொடர்புத் துறையில் நவீன சாதனமான செல் போனின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஏழை நாடாகக் கருதப்படும்இந்தியாவிலும் செல் போன் உபயோகிப்பாளர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
1994-95-ல் 3 லட்சமாக இருந்த செல் போன் உபயோகிப்பாளர்கள் எண்ணிக்கை 2000-ம் ஆண்டு முடிவில் 20 லட்சமாகவும், 2001-ம் ஆண்டுமுடிவில் 30 லட்சமாகவும் உயரும் என்று கருதப்படுகிறது.
இதையடுத்து செல்போன் சேவையில் ஈடுபட பல நிறுவனங்கள் போட்டா போட்டியில் இறங்கியுள்ளன.
ஏற்கெனவே நாட்டில் உள்ள செல் போன் சேவை நிறுவனங்களின் எண்ணிக்கை குறைந்து வரும் நிலையில், தற்போதுள்ள நிறுவனங்கள் தங்களது நிலையைஸ்திரப்படுத்திக் கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன.
ஹாங்காங்கைச் சேர்ந்த ஹட்சின்சன், வாம்போவா, டெல்லியைச் சேர்ந்த பாரதி டெலிகாம், பிபிஎல் டெலிகாம், டாடா பிர்லா-ஏ.டி. அண்ட் டி ஆகியநிறுவனங்கள் இந்த போட்டியில் ஈடுபட்டுள்ளன.
ஏற்கெனவே 1997-ல் 22 ஆக இருந்த செல் போன் சேவை நிறுவனங்களின் எண்ணிக்கை தற்போது 15 ஆகக் குறைந்துள்ளது. 2001-ல் இந்தஎண்ணிக்கை மேலும் குறையும் என்று கூறப்படுகிறது.
ஐ.ஏ.என்.எஸ்.