தமிழகத்தில் இன்று
எங்க கட்சிக்கு வாங்க...தலித்களை அழைக்கிறார் மூப்பனார்
சென்னை:
தலித் மக்கள் த.மா.கா.வில் சேர வேண்டும் என்று அக்கட்சித் தலைவர் மூப்பனார்அழைப்பு விடுத்துள்ளார்.
த.மா.கா.வின் எஸ்.சி.எஸ்.டி. பிரிவுத் தலைவராக முன்னாள்எம்.பி.வள்ளல்பெருமான் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் பொறுப்பேற்கும் நிகழ்ச்சிசனிக்கிழமை சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் த.மா.கா தலைவர் மூப்பனார் கலந்து கொண்டார். அவர் பேசுகையில்,தலித் மக்களின் நலனுக்காக பாடுபடும் இயக்கமான த.மா.கா.வில், தலித் மக்கள் சேரவேண்டும். தலித் மக்களை அதிகளவில் கட்சியில் சேர்க்கும் பொறுப்பைஎஸ்.சி.எஸ்.டி.பிரிவு ஏற்றுக் கொண்டு செயல்பட வேண்டும்.
கட்சியில் அவர்களை உறுப்பினர்களாக சேர்த்தால் மட்டும் போதாது. அவர்களின்வாழ்க்கை மேம்பாட்டுக்கும் உதவும் வகையில் இப்பிரிவும், அதன் நிர்வாகிகளும்பணியாற்ற வேண்டும் என்றார்.
புதிய தலைவராக பொறுப்பேற்ற வள்ளல்பெருமான் பேசுகையில், "கட்சியில் எல்லாமட்டத்திலும் தலித் பிரமுகர்கள் இருக்கிறார்கள். பதவி ஒதுக்கீடு என்று வரும்போதுஅவர்களை பின்னுக்கு தள்ளும் நிலைமை இப்போதும் உள்ளது. இந்நிலை மாற்றப்படவேண்டும் என்றார்.
முன்னதாக சத்தியமூர்த்திபவனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மறைந்த சுதந்திரப்போராட்டத் தியாகி சுப்ரமணிய சிவா படத்தை திறந்து வைத்து, மலர் அஞ்சலிசெலுத்தினார் மூப்பனார்.












Click it and Unblock the Notifications