தமிழகத்தில் இன்று
வைகோ சென்ற விமானத்தை உரசிப் பார்த்த பறவை
திருச்சி:
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சென்ற விமானத்தின் மீது பறவை மோதியதில் விமானத்தின் இறக்கைப் பகுதி சேதமடைந்தது.
சார்ஜாவிலிருந்து சென்னை வரும் விமானம் சனிக்கிழமை அதிகாலை 3.50 மணிக்கு திருச்சி விமான நிலையம் வந்தது. திருச்சி விமானநிலையத்தில் ம.தி.மு.கபொதுச்செயலாளர் வைகோ, பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகதீசன் உள்பட 9 பேர் அந்த விமானத்தில் ஏறினர். பின்னர் காலை 4.40மணிக்கு விமானம் சென்னைக்குப் புறப்பட்டது.
ஓடுபாதையில் கிளம்பியபோது அங்கிருந்த பறவை ஓடுபாதையில் சென்று கொண்டிருந்த விமானத்தின் மீது மோதியது. இதனால் சப்தம் கேட்டது.இதையடுத்து விமானி விமானத்தை நிறுத்தினார். உயர்அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
தொழில்நுட்ப நிபுணர்கள், விமானநிலைய உயர்அதிகாரிகள் வந்து பார்வையிட்டனர். அப்போது விமானத்தின்மீது பறவை மோதியதால்தான் விமானத்தில்சத்தம் கேட்டது தெரிய வந்தது.
பின்னர், விமானத்தில் பயணம் செய்த 30 பயணிகளும் இறக்கி விடப்பட்டு மாற்று விமானம் மூலம் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.












Click it and Unblock the Notifications