தமிழகத்தில் இன்று
தமிழர்கள் படுகொலையை நினைவு கூர்ந்த இலங்கை
கொழும்பு:
இலங்கையில் 1983 ம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட தமிழர்களின் 17-வது ஆண்டு நினைவு நாள் ஞாயிற்றுக்கிழமை அனுசரிக்கப்பட்டது.
1983 ம் ஆண்டு நடந்த இனக் கலவரத்தில், 3 ஆயிரம் தமிழர்கள், சிங்கள வெறியர்களால் படுகொலை செய்யப்பட்டனர். இது நடந்து இப்போது 17 ஆண்டுகள்ஆகிறது.
இதைக் குறிக்கும் வகையில் ஞாயிற்றுக்கிழமை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் 17 வது நினைவுநாள் அனுசரிக்கப்பட்டது. பல்வேறு இடங்களில்பிரார்த்தனைக் கூட்டங்கள் நடத்தப்பட்டன.
9 புலிகள் சாவு:
இதற்கிடையே யாழ்ப்பாணம், வவுனியா, வல்வெட்டித்துறை பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை நடந்த தாக்குதலில் 9 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டனர்.ராணுவ வீரர்கள் இரண்டுபேர் இறந்தனர்.
இந்த நிலையில், விடுதலைப் புலிகளுக்கும், எதிர்கட்சித் தலைவர் ரனில் விக்ரமசிங்கேவுக்கும் இடையே தொடர்பு இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டது.இதுதொடர்பாக விசாரணை எதுவும் நடத்தவில்லையென்று உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறினார்.












Click it and Unblock the Notifications