தமிழகத்தில் இன்று
கிராண்ட் மாஸ்டர் ஆனார் விஜயலட்சுமி
ஹைதராபாத்:
இந்தியாவின் முதல் பெண் செஸ் கிரான்ட் மாஸ்டர் என்ற பெருமையை தமிழகத்தின் விஜயலட்சுமி எட்டியுள்ளார்.
ஹைதாராபாத்தில் நடைபெற்று வரும் விப்ரோ கிரான்ட்மாஸ்டர் சர்வதேச செஸ் போட்டியில் டி. ஹரிகிருஷ்ணாவுடன் திங்கள்கிழமை நடந்த ஆட்டத்தில் அவர் டிராகண்டார்.
இதையடுத்து அவர் இந்தியாவின் முதல் கிரான்ட்மாஸ்டர் என்ற அந்தஸ்தைப் பெற்றார். இச் செய்தியை, அகில இந்திய செஸ் ஃபெடரஷன் பொதுச் செயலரும்,விப்ரோ போட்டியின் தலைமை நடுவர் பி.டி. உமர் கோயா உறுதி செய்தார்.
இப் போட்டியில் விளையாடியதன் மூலம் ஃபிடே (ஊஐஈஉ) சாம்பியன்ஷிப் போட்டியின் 11-வது பிரிவில் 2503புள்ளிகளை விஜயலட்சுமி பெற்றார். இதையடுத்து அவருக்கு கிரான்ட்மாஸ்டர் அந்தஸ்துகிடைத்தது.
விப்ரோ போட்டியில் வென்றதன் மூலம் விஜயலட்சுமிக்கு ரூ. 2 லட்சம் பரிசு கிடைக்கும்.
கிரான்ட்மாஸ்டர் அந்தஸ்து கிடைத்த பிறகு நிருபர்களிடம் அவர் பேசியதாவது:
இன்று எனது வாழ்க்கையில் மறக்க முடியாத நாள். இந்தியாவின் முதல் பெண்கிரான்ட்மாஸ்டர் என்ற அந்தஸ்து கிடைத்தது எனக்குப் பெருமையாக உள்ளது.
திங்கள்கிழமை காலை ஆட்டம் தொடங்குவதற்கு முன் நான் சற்று பதற்றத்துடன்இருந்தேன். விளையாடுவதற்கு முன் பகவத் கீதையை படித்தேன். வழக்கமானஆட்டத்தையே ஆட முடிவு செய்தேன்.
முதலில் ஆடிய செஸ் போட்டிகளில் மனதுக்குள் கிரான்ட்மாஸ்டர் ஆக வேண்டும் என்றுநினைத்துக் கொண்டே விளையாடியதால் பல ஆட்டங்களில் நான் தோற்றேன்.
அதனால், விப்ரோ போட்டியில் வழக்கமான ஆட்டத்தை விளையாடவேண்டும் என்றுமட்டும் நினைத்தேன். இறுதியில் சாதித்தேன் என்றார் விஜயலட்சுமி.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications