தமிழகத்தில் இன்று

Subscribe to Oneindia Tamil

கருணாநிதியின் "இரட்டை வேடத்தைக்" கலைக்க அதிமுக ஆர்ப்பாட்டம்

சென்னை:

காவிரி நதி நீர்ப் பிரச்சினையில் முதல்வர் கருணாநிதியின் இரட்டை வேடத்தைக் கலைக்க ஜூலை 31-ம் தேதி தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டத்தலைநகரங்களிலும் அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம் நடத்தும் என்று அக் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை:

காவிரி நதி நீர்ப் பிரச்சினையில் தமிழகம் தனது உரிமையை நிலைநாட்ட முதல்வர் கருணாநிதி தவறிவிட்டார். இதை மறைக்க தமிழக மக்களுக்கு தவறானசெய்திகளை அவர் தெரிவித்து வருகிறார்.

தமிழகத்துக்கு 19 டி.எம்.சி. தண்ணீர் விட கர்நாடகம் ஒப்புக் கொண்டுள்ளதாக நிருபர்களிடம் ஜூலை 16-ம் தேதி தெரிவித்தார். ஆனால், 6 டி.எம்.சி. தண்ணீர்மட்டுமே தர சம்மதித்ததாக கர்நாடக முதல்வர் எஸ்.எம். கிருஷ்ணா தெரிவித்தார்.

இதையடுத்து, கர்நாடகம் 19 டி.எம்.சி. தண்ணீர் விட சம்மதித்தது ஜூன் மற்றும் ஜூலை 13-ம் தேதி வரையுள்ள காலகட்டத்துக்கு என்று பிறகு விளக்கம்அளித்துள்ளார்.

கருணாநிதியின் இந்த மறுப்பு விளக்கம் தமிழக மக்களை குறிப்பாக காவிரி டெல்டா பகுதி விவசாயிகளை ஏமாற்றுவது போல் ஆகும். கருணாநிதியின் இந்தஇரட்டை வேடத்தை மக்கள் தெரிந்துகொள்ளும் வகையில் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டத் தலைநகரங்களும் ஜூலை 31-ம் தேதி ஆர்ப்பாட்டம்நடத்தப்படும்.

காவிரி நீர் தீர்ப்பாயத்தின் இடைக்கால உத்தரவுப்படி தமிழகத்துக்குக் கிடைக்கவேண்டிய நியாயமான தண்ணீரை கர்நாடகத்திடமிருந்து கேட்டுப் பெற முதல்வர்நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார் ஜெயலலிதா.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+