For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழகத்தில் இன்று

By Staff
Google Oneindia Tamil News

மகன் அரசியலில் கஷ்டப்படுவதை விரும்பாத ராமதாஸ்

சென்னை:

எல்லோரையும் போல எனது மகனும் அரசியலுக்கு வந்த கஷ்டப்படுவதை விரும்பவில்லை என்று பாட்டாளிமக்கள் கட்சித் தலைவர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

சென்னையில், டாக்டர் ராமதாஸ் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:

தமிழ்நாட்டில் வரும் சட்டசபைத் தேர்தலில் பா.ம.க, தி.மு.க வுடனான கூட்டணியில் தொடர்ந்து நின்று தேர்தலைசந்திக்கும். அதில் எந்தவித மாற்றமும் இல்லை.

2006-ம் ஆண்டு தமிழ்நாட்டில் பாட்டாளி மக்கள் கட்சிதான் ஆட்சியமைக்கும். 1967-ம் ஆண்டு முதல்தமிழ்நாட்டில் தி.மு.க வும் அ.தி.மு.க வும் மாறி, மாறி ஆட்சி நடத்தி வருகின்றன. இந்த நிலையில் இன்னொருகட்சிக்கு வாய்ப்பு கொடுக்கலாம் என்று தமிழக மக்கள் நினைக்கிறார்கள். பா.ம.க வுக்கு அந்த வாய்ப்பைஅளிக்கும் மனநிலையில் தமிழக மக்கள் உள்ளனர்.

வரும் சட்டசபைத் தேர்தலில் தொகுதிப் பங்கீட்டில் கடுமையான மோதல்கள் இருக்கும். கருணாநிதியும்,ஜெயலலிதாவும் என்னுடன் மிகுந்த மரியாதையுடனும், அன்புடனும் தான் பழகுகிறார்கள். அதில் எந்த மாற்றமும்இல்லை. அதற்காக கொள்கையை அவர்கள் விட்டுவிடவில்லை. எங்களுக்கு அதிக இடம் வேண்டும்.கொள்கையை விட்டுக் கொடுக்க மாட்டோம்.

பாண்டிச்சேரியில் பா.ம.க மிகுந்த பலத்தோடு உள்ளது. பா.ம.க தற்போது தி.மு.க கூட்டணியில் உள்ளது. இதேகூட்டணியில் தான் பா.ம.க தேர்தலை சந்திக்கும். பாட்டாளி மக்கள் கட்சிக்கு இளைஞர்கள் மற்றும் பெண்களின்ஆதரவு அதிகமாக உள்ளது.

கடந்த 1995 ம் ஆண்டு பாட்டாளி மக்கள் கட்சி பசுமைத் தாயகம் என்ற அமைப்பைத் துவக்கியது. அது அரசு சாராஅமைப்பாகும். இதன் தலைவராக, எனது மகன் அன்புமணி உள்ளார். அவர் அரசியலுக்கு வர வேண்டும் என்றுஇளைஞர்கள் விரும்புகிறார்கள். தான் அரசியலுக்கு வந்து கஷ்டப்படுவது போல் எனது மகனும் அரசியலுக்குவந்து கஷ்டப்பட வேண்டாம் என்று விரும்புவதாக கூறினார் ராமதாஸ்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X