தமிழகத்தில் இன்று
கோவையிலிருந்து ஏற்றுமதியான துணிகளின் அளவு 6 சதம் உயர்வு
கோவை:
கோவை மாவட்டத்தில் உள்ள மில்களிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட துணிகளின் அளவு 6 சதவீதம்உயர்ந்துள்ளது என டெக்ஸ்டைல் கமிட்டித் தலைவரும், கோவை எம்.பி.யுமான ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
திருப்பூரில் நிருபர்களிடம் ராதாகிருஷ்ணன் கூறியதாவது:
இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்கு ஜவுளி ஏற்றுமதி அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டு இந்தியாவிலிருந்து 8ஆயிரத்து 500 கோடி ரூபாய் அளவிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவிலேயே கோவை மாவட்டத்தில் தான் அதிக ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. விசைத் தறியைப்பொறுத்தவரை, இம்மாவட்டத்தில் சோமனூர், பல்லடம் ஆகியவற்றில் அதிகமான விசைத்தறி தொழிற்சாலைகள்உள்ளன.
இவை பயன் பெறும் வகையில், ரூ.109.72 கோடியில் ஒரு சேவை மையம் துவக்கப்படவுள்ளது. இதில், நவீனத்தொழில்நுட்பம், பயிற்சி, மற்றும் நவீன இயந்திரங்கள் ஆகியவை பற்றிய தகவல்கள் முழுமையாக விளக்கப்படும்.இதனால் காடத் துணிகளின் தரம் உயர வாய்ப்பு ஏற்படும் என்றார்.












Click it and Unblock the Notifications