தமிழகத்தில் இன்று
அமைதி திரும்புமா...ஆதங்கத்தில் பிஜி மக்கள்
சுவா:
கடுமையான அரசியல் நெருக்கடியில் பிஜி உள்ளது. நாட்டில் இன்னும் புதிய அரசு அமைக்கப்படாத நிலையில் அடுத்து என்ன நடக்குமோ என்ற அச்சத்திலும்,வெறுப்பிலும் தங்களது விடுமுறையைக் கூட அனுபவிக்க முடியாமல் உள்ள பிஜி மக்கள்.
புரட்சியின் மூலம் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரதமர் மகேந்திர சவுத்ரியின் ஆட்சியைக் கவிழ்த்த பிஜி தொழிலதிபர் ஜார்ஜ் ஸ்பீட், தனது கோரிக்கைகள்குறித்து தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
அதே நேரத்தில் புரட்சியால் பதவியை இழந்த மகேந்திர சவுத்ரி வெளிநாடுகளின் உதவியுடன் பிஜிக்கு வெளியே அரசு அமைப்பது குறித்து தனது ஆதரவாளர்கள்பேச்சு நடத்தி வருகிறார்.
இதற்கிடையே புரட்சிக்குப் பிறகு ஆட்சி செய்து வரும் ராணுவமும், அதிபராக நியமிக்கப்பட்ட ஐலாய்லோவும் அடுத்து என்ன செய்வது என்ற யோசனையில்உள்ளனர்.
இந்த மூன்று சம்பவங்களுக்கு இடையில் "சிக்கித் தவிக்கின்றனர்" பிஜி மக்கள். நாட்டில் புதிய ஆட்சி அமையும், மீண்டும் அமைதி திரும்புமா, தங்களுக்குநல்லகாலம் பிறக்குமா என்ற எதிர்பார்ப்பில் அவர்கள் உள்ளனர்.
புரட்சியின் மூலம் மகேந்திர சவுத்ரியின் ஆட்சியைக் கைப்பற்றிய ஜார்ஜ் ஸ்பீட் தனது பல கோரிக்கைகளை நிறைவேற்றிக் கொண்டார். ஆனால், புதியஅமைச்சரவையில் தனது ஆதரவாளர்களுக்கு அதிக இடம் கொடுக்காததை அவர் எதிர்த்து வருகிறார்.
இதனால், புதிய அதிபரால் அறிவிக்கப்பட்ட புதிய அமைச்சரவை இன்னும் பதவி ஏற்கப்படாமல் உள்ளது. இந் நிலையில் அடிசமானுனா ககோபாவ்என்ற பெண்ணை பிரதமராக நியமிக்கவேண்டும் என்று புதிய கோரிக்கையை ஜார்ஜ் ஸ்பீட் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாகவும் புதிய ஆட்சி அமைப்பது தொடர்பாகவும் உயர்மட்ட பேச்சு வார்த்தை நடத்தவேண்டும் என்று ஜார்ஜ் ஸ்பீட் கூறியுள்ளார்.
இதற்கிடையே, பதவியை இழந்த மகேந்திர சவுத்ரி தனது தலைமையில் புதிய அரசு அமைக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். பிஜிக்கு வெளியேஒரு ஆட்சி அமைக்க வெளிநாடுகளின் உதவியைக் கோர அவர் முடிவு செய்துள்ளார்.
இது தொடர்பாக தனது ஆதரவாளர்களுடன் விடி லோவு தீவில் அவர் பேச்சு நடத்தி வருகிறார். புதிய அரசு தொடர்பாக கொள்கை அளவில் முடிவுசெய்துள்ளோம். ஆனால் அது எப்போது, எங்கு என்பதை இன்னும் முடிவு செய்யவில்லை என்று அவரது ஆதரவாளர்கள் கூறினர்.
இந் நிலையில் பிஜியில் உள்ள தொழிற்சங்கங்கள் எல்லாம் புரட்சிக்கு எதிராக போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்துள்ளன. புரட்சியால் அரசியல்மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாகியுள்ள பிஜி, மேலும் பல பிரச்சினைகளை எதிர் கொண்டுள்ளது.
ஏற்கெனவே பிஜியுடனான தூதரக உறவை முறித்துக் கொண்டு பொருளாதாரத் தடைகளை விதித்துள்ள ஆஸ்திரேலியா, புதிய அரசில் புரட்சிப் படையினருக்குகூடுதல் அதிகாரம் கொடுக்கப்பட்டாலோ அல்லது ஜனநாயக முறையில் புதிய ஆட்சி அமையாமல் இருந்தாலோ மேலும் பொருளாதாரத் தடைகள்விதிக்கப்படும் என்று எச்சரித்துள்ளது.












Click it and Unblock the Notifications