தமிழகத்தில் இன்று
நஷ்டத்தில் இயங்கும் 53 நிலக்கரிச் சுரங்கங்கள்
டெல்லி:
இந்தியாவில் மத்திய நிலக்கரிச் சுங்கங்கள் நிறுவனத்துக்குச் சொந்தமான 53 நிலக்கரிச் சுரங்கங்கள் நஷ்டத்தில் செயல்படுவதாக மத்திய நிலக்கரித் துறைஇணை அமைச்சர் என்.டி. சண்முகம் தெரிவித்தார்.
மக்களவையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கேள்விநேரத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் எழுத்து மூலம் அளித்த பதில்:
1997-98-ம் ஆண்டு நஷ்டத்தில் இயங்கும் நிலக்கரிச் சுரங்கங்களின் எண்ணிக்கை 50 ஆக இருந்தது. இது நடப்பு ஆண்டில் 53 ஆக உயர்ந்துள்ளது.
நிலக்கரி உற்பத்தி மற்றும் கையிருப்புக்கு இடையே ஏற்பட்ட மாறுதல் காரணமாக நஷ்டம் ஏற்பட்டதாக அமைச்சர் தெரிவித்தார். இது தவிர நிலஆர்ஜிதத்தில் ஏற்பட்ட தாமதம் உள்ளிட்ட வேறு பல காரணங்களால் நிலக்கரி உற்பத்தி குறைந்துவிட்டது.
நஷ்டத்தைக் குறைக்க இனிமேலும் லாபம் கிடைக்காது என்று கருதப்படும் சுரங்கங்களை மூடிவிடுவது என்றும் சில சுரங்கங்களை சீரமைப்பது என்றும் முடிசெய்யப்பட்டுள்ளது என்றார் அமைச்சர்.
நடப்பு ஆண்டில் மார்ச் 31-ம் தேதி கணக்கீட்டுப்படி செய்ல் (ஸ்டீல் அதாரிட்டி ஆஃப் இந்தியா) நிறுவனத்துக்கு ரூ.1,720 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதுஎன்றார் சண்முகம்.
யு.என்.ஐ.