தமிழகத்தில் இன்று
Subscribe to Oneindia Tamil
கிளினிக்கில் திருடிய ஊனமுற்ற வழக்கறிஞர்
திருச்சி:
திருச்சி தில்லைநகர் பகுதியில் கிளினிக்கிலிருந்து பொருட்களைத் திருடியது தொடர்பாக உடல் ஊனமுற்ற வழக்கறிஞரைப் போலீஸார் கைது செய்தனர்.
ரவி என்ற வழக்கறிஞர் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் மருத்துவமனைக்குச் சென்றார். அங்கு டாக்டர் இவரை சிறிது நேரம் காத்திருக்கச் சொல்லிவிட்டு ஆபரேஷன் தியேட்டருக்குச் சென்று விட்டார்.
அந்த நேரத்தைப் பயன்படுத்திக்கொண்ட வழக்கறிஞர் ரவி, டாக்டரின் அறையிலிருந்த மொபைல் போன், டேபிள் லைட், ரத்த அழுத்தத்தைக் கண்டறியும்உபகரணம் ஆகியவற்றைத் திருடிக் கொண்டு சென்று விட்டார்.
டாக்டர் இதுகுறித்துக் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கறிஞர் ரவி மேல் வழக்குப் பதிவு செய்து அவரைக் கைது செய்தனர்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications