தமிழகத்தில் இன்று
Subscribe to Oneindia Tamil
அங்கீகாரம் ரத்தாகியும் "சேவையைத் தொடர்ந்த ஐ.டி.ஐ.
சேலம்:
அங்கீகாரம் ரத்து செய்யப்பட்ட பின்பும் தனியார் ஐ.டி.ஐ கல்வி நிறுவனத்தை நடத்திவந்தஅதன் தாளாளரும், முதல்வரும் சேலம் அருகே கைது செய்யப்பட்டனர்.
சேலம் அருகே உள்ள ஓமலூரில் கடந்த எட்டுஆண்டுகளாக கல்கி ஐ.டி.ஐ என்ற கல்விநிறுவனம் செயல்பட்டு வந்தது. அதன் அங்கீகாரத்தை தமிழக அரசு 1998-ம் ரத்து செய்தது.இங்கு பயின்ற மாணவர்களும் தேர்வு எழுத அனுமதிக்கப்படவில்லை.
மாணவர்கள் இது குறித்து போலீசில் புகார் செய்தனர். அதன் அடிப்படையில் அந்த கல்விநிறுவனத்தின் தாளாளர் ரகுபதி, முதல்வர் சிவக்குமார் மற்றும் ஒரு ஊழியரை போலீசார்கைது செய்தனர்.
இந் நிலையில் மாணவர்கள் அந்த கல்வி நிறுவனத்தைஅரசு ஏற்று நடத்த வேண்டும் எனகோரிக்கை விடுத்துள்ளனர்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications