தமிழகத்தில் இன்று
Subscribe to Oneindia Tamil
டீ தொழிலாளர்களுக்கு ஆதரவாக போராடுவோம் ...எச்சரிக்கிறார் மூப்பனார்
சென்னை:
நீலகிரித் தேயிலைத் தொழிலாளர்களின் கோரிக்கை குறித்து மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து மெளனம் சாதித்தால், மாபெரும் போராட்டம் நடத்தத்தயங்க மாட்டோம் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் மூப்பனார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சென்னையில் இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை:
தேயிலை உற்பத்தியாளர்களின் கோரிக்கையை மாநில அரசு இதுவரை ஏற்கவில்லை. பச்சைத் தேயிலைக்கு கிலோவுக்கு ரூ. 15 மானியம் வழங்குவதற்குஉடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ரூ. 1.5 கோடி அளவுக்கு இலங்கைத் தேயிலையை இறக்குமதி செய்ய மத்தியஅரசு முடிவெடித்ததே இப்போதைய பிரச்சினைக்குக் காரணம். இந்த இறக்குமதிதேயிலைக்கு வெறும் 7.5 சதவீத சுங்க வரி மட்டுமே விதிக்கப்பட்டுள்ளது. இது நியாயமற்றது என்று அவர் கூறியிருந்தார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications