தமிழகத்தில் இன்று
ஆட்சியில் பங்கு கேட்கிறது காங்கிரஸ்
சென்னை:
அ.தி.மு.க.வுடன் கூட்டணி நீடிக்கும். ஆனால் கூட்டணி ஆட்சிதான் அமைக்க வேண்டும். அதில் பங்கும் தர வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிதலைவர் இளங்கோவன் கூறினார்.
தமிழக அரசியல் நிலவரம் குறித்து டெல்லியில் காங்கிரஸ் தலைவர் சோனியாவுடன்ஆலோசனை நடத்திவிட்டு சென்னை திரும்பிய அவர் நிருபர்களுக்கு அளித்தபேட்டி:
அ.தி.மு.க.வுடன் கூட்டணி நீடிக்கும். வருகிற சட்டப்பேரவைத் தேர்தலில் அ.தி.மு.க.வுடன் கூட்டு சேர்ந்து காங்கிரஸ் போட்டியிடும். கூட்டணி ஆட்சிஏற்படும் வாய்ப்பு இருந்தால், ஆட்சியில் நிச்சயம் பங்கு கேட்போம்.
கூட்டணி ஆட்சியில் பங்கு கேட்க வேண்டும் என்று தொண்டர்கள் விரும்புகிறார்கள்.அதை நிறைவேற்ற தலைவர் என்ற முறையில் நான் பாடுபடுவேன்.
அ.தி.மு.க. கூட்டணியில் எத்தனை சீட் கேட்போம் என்று இப்போதைக்கு தெரிவிக்க முடியாது. ஏனெனில் தேர்தலுக்கு இன்னும் 7 மாதங்கள்உள்ளன. தேர்தல் தேதிஅறிவிக்கப்பட்ட பிறகு இட ஒதுக்கீடு பற்றி பேசி முடிவு செய்வோம்.
தேர்தலில் 234 தொகுதிகளிலும் போட்டியிட வேண்டும் என்றுதான்
தொண்டர்களும், நானும் விரும்புகிறோம். இது பற்றியும் தேர்தலில் தனித்து நிற்பது பற்றியும் காங்கிரஸ் தலைமையிடம்தான் முடிவு செய்யவேண்டும்.
விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக உள்ள பாட்டாளி மக்கள் கட்சி, மறுமலர்ச்சிதிராவிட முன்னேற்றக் கழகம் ஆகிய கட்சிகளைத் தடைசெய்யவேண்டும் என்றுகாங்கிரஸ் கோரி வருகிறது.அப்படி இருக்கும்போது அ.தி.மு.க கூட்டணிக்கு பாட்டாளி மக்கள் கட்சி வந்தால் அது பற்றி தேர்தல்நேரத்தில் ஆலோசிக்கப்படும்.
டெல்லியில் த.மா.கா. தலைவர் மூப்பனாரைச் சந்தித்துப் பேசினேன். 3-வது அணி பற்றி எந்த கருத்தையும் அவர் என்னிடம் தெரிவிக்கவில்லை.சுப்பிரமணியம் சுவாமிதான் 3-வது அணி பற்றி பேசி வருகிறார். ஆனால், அது உருப்படுவதாகத் தெரியவில்லை.
என்னைப் பொறுத்தவரை தமிழகத்தில் 3-வது அணி அமைவதற்கான
சாத்தியக்கூறு இருப்பதாகத் தெரியவில்லை என்றார் இளங்கோவன்.












Click it and Unblock the Notifications