தமிழகத்தில் இன்று
மக்கள் தொகைக் கட்டுப்பாட்டில் கேரளாவை மிஞ்சியது தமிழகம்
டெல்லி:
மக்கள் தொகைக் கட்டுப்பாட்டில் கேரள மாநிலத்தை மிஞ்சியது தமிழகம். இதற்காகதமிழகத்திற்கு ஜே.ஆர்.டி.டாடா விருது கிடைத்துள்ளது.
இந்திய மக்கள் தொகைக் கட்டுப்பாட்டுக் கழகம் இந்த விருதை வழங்குகிறது. இந்தவிருது ரூ. 10 லட்சம் பரிசுத் தொகை மற்றும் கோப்பையைக் கொண்டது.
இந்திய சட்டக் கமிஷன் உறுப்பினரும், விருதுக் குழுத் தலைவருமான நீதிபதி லீலாசேத், வெள்ளிக்கிழமை விருது குறித்து அறிவித்தார். அவர் கூறுகையில், மக்கள்தொகைக் கட்டுப்பாட்டுத் திட்டங்கள் மற்றும் சுகாதாரத் துறையில் தமிழகம் சிறப்பாகசெயல்பட்டு வருகிறது.
தமிழகத்தின் சென்னை, கேரளாவின் ஆலப்புழா, அஸ்ஸாமின் ஜோர்ஹட் ஆகியமூன்று மாவட்டங்களும் மக்கள் தொகைக் கட்டுப்பாட்டில் சிறந்த மாவட்டங்களாகத்தேர்வு செய்யப்பட்டுள்ளன. இந்த மாவட்டங்களாக தலா ரூ. 2 லட்சம் பரிசுவழங்கப்பட்டுள்ளது.
1993-ல் தமிழகத்தின் குழந்தைப் பிறப்பு விகிதம் 2.1 சதவீதமாக இருந்தது.தமிழகத்தின் அனைத்துப் பிரிவு மக்களும் சிறு குடும்பமே சிறந்தது என்றகோட்பாட்டை ஏற்றுக் கொண்டுள்ளனர். இதன் காரணமாகவே மக்கள் தொகைக்கட்டுப்பாட்டுத் திட்டங்கள் வெற்றி பெற்றுள்ளன.
மக்கள் தொகைக் கட்டுப்பாட்ட இன்டக்ஸில் தமிழகத்திற்கு 97 புள்ளிகள்கிடைத்துள்ளன. கேரளத்திற்கு 92 புள்ளிகளும், ஆந்திராவிற்கு 90 புள்ளிகளும்கிடைத்துள்ளன என்றார் சேத்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications