தமிழகத்தில் இன்று
4 பவுன் நகைக்காக 13 வயது சிறுமி கற்பழித்துக் கொலை
நெய்வேலி:
நெய்வேலி நிலக்கரிச் சுரங்க அதிகாரியின் மகள் கற்பழித்துக் கொலை செய்யப்பட்டார். வீட்டில் இருந்த 4 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன.
சென்னை என்எஸ்சி போஸ் சாலையில் வசிப்பவர் உத்திராபதி (43). இவர் நெய்வேலி பழுப்பு நிலக்கரி சுரங்கத்தில் இளநிலைப் பொறியாளராக வேலை செய்துவருகிறார். இவரது மகள் கவிதா (13). நெய்வேலியில் குளூனி பள்ளியில் 8 ம் வகுப்பு படித்து வந்தார்.
உத்திராபதியின் மனைவி நீலாவதிக்கு உடல்நிலை சரியில்லாததால் மாதம் ஒரு முறை தஞ்சாவூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சைஎடுத்து வருகிறார்.
கவிதாவுக்குக் கடந்த 24ம் தேதி என்எல்சி மருத்துவமனையில் டான்சில் அறுவை சிகிச்சை நடந்தது. கடந்த 26 ம் தேதி அவர் மருத்துவமனையில் இருந்துடிஸ்ஜார்ஜ் ஆகினார். இதனால் கவிதா சனிக்கிழமை பள்ளிக்குச் செல்லவில்லை.
சனிக்கிழமை அதிகாலை 5 மணியளவில் உத்திராபதியும், அவரது மனைவி நீலாவதியும் சிகிச்சைக்காக தஞ்சாவூருக்குப் புறப்பட்டுச் சென்றனர்.
மருத்துவமனைக்குச் சென்ற கவிதாவின் தாய், பக்கத்து வீட்டு நண்பர் அண்ணாதுரை என்பவர் வீட்டில் கவிதாவைக் கவனித்துக் கொள்ளும்படி கூறிவிட்டுச்சென்றார். கவிதா தனது தங்கை காயத்திரியையும், தம்பி பாலமுருகனையும் 8 மணியளவில் பள்ளிக்கு அனுப்பி வைத்தார்.
பின்பு பிற்பகல் 1 மணியளவில் அண்ணாதுரையின் மனைவி அமுதா, கவிதாவுக்கு சாப்பாடு கொண்டு வந்தார். அப்போது வீட்டின் முன்பக்கக் கதவுதிறந்திருந்தது. வீட்டில் டி.வி ஓடிக் கொண்டிருந்தது. ஆனால் கவிதாவைக் காணவில்லை. கவிதாவை ஒவ்வொரு அறையாகத் தேடிய அமுதா, இறுதியில்படுக்கையறையில் கவிதா அலங்கோலமாக, பேச்சுமூச்சின்றிக் கிடந்ததைப் பார்த்தார்.
உடலில் காயங்கள் கிடந்தன. கவிதாவை அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு கவிதாவை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவேஇறந்து விட்டதாக அறிவித்தனர்.
கவிதாவின் கழுத்துப் பகுதியில் கீறல்களும், இடது காலில் ரத்தம் கட்டியும் இருந்தது. அதோடு கவிதா காதில் அணிந்திருந்த தங்கத்தோடும், வீட்டில்பீரோவில் இருந்த 4 பவுன் எடையுள்ள நகைகளும் திருடு போயுள்ளன என்பதும் தெரிய வந்தது.