தமிழகத்தில் இன்று

Subscribe to Oneindia Tamil

20 இந்தியக் குடும்பங்களைச் சிறை பிடித்தனர் பிஜி புரட்சிக்காரர்கள்

லம்பாசா (பிஜி):

பிஜியில் புரட்சிக் கும்பல் தலைவர் ஜார்ஜ் ஸ்பீடின் ஆதரவாளர்கள் ஞாயிற்றுக்கிழமை 20 இந்தியக் குடும்பங்களைப் பிணைக்கைதிகளாகப் பிடித்துச் சென்றனர்.

இந்திய வம்சாவளிக் குடும்பங்களின் வீடுகளை அவர்கள் சூறையாடினர். அரிசி, சர்க்கரை மற்றும் பிற பொருட்களை புரட்சிக்காரர்கள் எடுத்துச் சென்றனர்.

கடந்த புதன்கிழமை சுவாவில் ஜார்ஜ் ஸ்பீட் ராணுவ வீரர்களால் கைது செய்யப்பட்டார். இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் தற்போது 20 இந்தியக்குடும்பங்களை புரட்சிக்காரர்கள் பிடித்து வைத்துள்ளனர். அனைவரும் விடிலேவு தீவில் உள்ள லம்பாசா மாவட்டத்திலுள்ள மோனசாவு அணைக்கட்டுப்பகுதியில் சிறை வைக்கப்பட்டுள்ளனர். இதனால் லம்பாசா முழுவதும் பதட்டம் நிலவுகிறது.

இந்த நிலையில், அடுத்த 14 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. லம்பாசா நகரின் முக்கியச் சாலைகளில் ராணுவ வீரர்கள் தீவிரகண்காணிப்பில் வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+