தமிழகத்தில் இன்று
ஜுலை 31-ல் சூரிய கிரகணம்
சென்னை:
ஒரே மாதத்தில் இரண்டாவது சூரிய கிரகணத்தை உலகம் 31-ம் தேதி காணவிருக்கிறது.
ஜூலை 31ம் தேதி இரண்டாவது சூரிய கிரகணம் நிகழவிருக்கிறது. இறுப்பினும், இந்தசூரிய கிரகணத்தை இந்தியாவில் பார்க்க முடியாது.
இது பற்றி தமிழ்நாடு அறிவியல் மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்கூறியுள்ளதாவது:
ஜூலை 1-ம் தேதி ஒரு சூரிய கிரகணம் நிகழ்ந்தது. விக்ரம ஆண்டின் முதல் சூரியகிரகணம் இதுவாகும். இதைத் தொடர்ந்து 31 ம் தேதி மற்றொரு சூரிய கிரகணம்நிகழ்கிறது. இது போன்று ஒரே மாதத்தில் இரண்டு சூரிய கிரகணம் 1880-ம்ஆண்டில்தான் நிகழ்ந்துள்ளது.
மாதத்தில் இரண்டாவது முறையாக நிகழும் இந்த கிரகணம் இந்தியாவில் தெரியாது.இந்த ஆண்டின் (விக்ரம) ஆண்டின் இரண்டாவது சூரிய கிரகணமாகும் இது
வடதுருவப் பகுதியான அலாஸ்கா, வடக்கு கனடா, வடமேற்கு அமெரிக்கா, ஆகியஇடங்களில் இந்தக் கிரகணத்தைக் காணலாம். இந்திய நேரப்படி 31ம் தேதி மாலை 6மணி 7 நிமிடத்திலிருந்து 9 மணி 19 நிமிடம் வரை இது தெரியும் என்று தமிழ்நாடுஅறிவியல் தொழில் நுட்ப மையம் அறிவித்துள்ளது.