தமிழகத்தில் இன்று
Subscribe to Oneindia Tamil
தயார் நிலையில் அதிரடிப்படை
சென்னை:
வீரப்பன் கும்பலால் கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்திச் செல்லப்பட்டதையடுத்து வீரப்பன் உள்ள வனப் பகுதியில் முகாமிட்டுள்ள தமிழக, கர்நாடகஅதிரடிப்படை வீரர்கள் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.
சென்னையில், தமிழக கூடுதல் டி.ஜி.பி. குமாரசாமி செய்தியாளர்களிடம் கூறுகையில், தமிழக அதிரடிப்படை வீரர்களும், கர்நாடக அதிரடிப்படை வீரர்களும் முழுஉஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். தேவைப்பட்டால், காட்டுக்குள் நுழையவும் அவர்கள தயாராக உள்ளனர்.
இரு மாநில முதல்வர்கள் பேச்சுக்குப் பிறகு எடுக்கப்படும் முடிவுகளைப் பொறுத்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் குமாரசாமி.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications