400 விக்கெட்டுகளை வீழ்த்தினார் ஆம்புரோஸ்
காட்டுப் பகுதியில் தயார் நிலையில் அதிரடிப்படை
கோவை:
வீரப்பன் பதுங்கியுள்ள இடத்தை தேவைப்பட்டால் நெருங்க அதிரடிப்படையினர்குவிக்கப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.
அதே நேரத்தில் நக்கீரன் கோபால் வீரப்பனை சந்திக்க வசதியாக அதிரடிப்படையினர்தங்களது தேடுதல் வேட்டைய நிறுத்தி வைத்துள்ளனர்.
கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தப்பட்ட தாளவாடிப் பகுதியில் இரண்டாயிரம்போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். நீலகிரி தேயிலைப் பிரச்னைக்காக நீலகிரியில்குவிக்கப்பட்டிருந்த அதிரடிப்படையினர் அனைவரும் நீலகிரிப் பிரச்னையை விட்டுவிட்டு, தாளவாடி காட்டுப் பகுதியை முற்றுகையிட்டுள்ளனர்.
தகவல் அறிந்ததும், கோவையிலிருந்து விரைந்து எஸ்.பி., தாமரைக் கண்ணன் இந்தஅதிரடிப்படைக்கு தலைமை ஏற்றுச் செல்கிறார்.
நக்கீரன் கோபால், பேச்சுவார்த்தை நடத்தச் செல்வார் என்ற நிலையில் வீரப்பனைத்தேடும் பணியை இன்னும் முழுமையாகத் தொடங்கவில்லை. வீரப்பனுடன்பேச்சுவார்த்தை முடிந்த பிறகே அடுத்த கட்டப் பணியை அதிரடிப்படையினர்தொடங்கவுள்ளனர்.
அதுவரை எப்படி சுற்றி வளைப்பது, எங்கு பதுங்கியுள்ளான், என்பது பற்றியதகவல்களைப் போலீசார் திரட்டியுள்ளனர். இது தவிர, புதிதாக ஈரோடு மாற்றும்கோவை மாவட்டங்களிலிருந்து கூடுதல் அதிரடிப் போலீசாரும் காட்டிற்குள்விரைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications