ஹிஸ்புல் தீவிரவாதிகளுடன் பேச்சைத் துவக்கியது மத்திய அரசு
ஸ்ரீநகர்:
ஜம்மு - காஷ்மீர் மாநிலத் தலைநகர் ஸ்ரீநகரில், ஹிஸ்புல் முஜாஹிதின் தீவிரவாத அமைப்புத் தலைவர்களுக்கும், மத்திய அரசுக்கும் இடையே வியாழக்கிழமைபேச்சுவார்த்தை தொடங்கியது.
காஷ்மீரில் செயல்பட்டு வரும் பாகிஸ்தான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல் முஜாஹிதின் தீவிரவாத இயக்கம், மூன்று மாதம் போர்நிறுத்தம் செய்வதாக சமீபத்தில்அறிவித்திருந்தது. இதையடுத்து மத்தியஅரசும் போர் நிறுத்தம் அறிவித்தது.
போர் நிறுத்தத்திற்குப் பிறகு பேச்சுவார்த்தை நடத்தத் தயார் என்று ஹிஸ்புல் அமைப்பினர் தெரிவித்தனர். இதையடுத்து வியாழக்கிழமை ஸ்ரீநகரில் உள்ள நேருவிருந்தினர் மாளிகையில் பிற்பகல் 1.45 மணிக்குப் பேச்சுவார்த்தை துவங்கியது.
ஹிஸ்புல் அமைப்பின் சார்பில் ரியாஸ் ரசூல் தலைமையிலான மூன்று பேரும், மத்திய அரசு சார்பில் உள்துறை அமைச்சக சிறப்பு செயலாளர் பி.ஆர்.காக்கர்ஆகியோரும் பேச்சுவார்த்தையில் பங்கேற்றனர்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications