திருநள்ளாறு சனிப்பெயர்ச்சி விழாவில் 5 லட்சம் பக்தர்கள் பங்கேற்பு
சென்னை:
சனிப்பெயர்ச்சியையொட்டி திருநள்ளாறு சனீஸ்வர பகவான் ஆலயத்தில் நடைபெற்ற சனிப்பெயர்ச்சி விழாவில் 5 லட்சம் பக்தர்கள் கலந்து கொண்டனர்.
மேஷ ராசியிலிருந்து ரிஷப ராசிக்கு வியாழக்கிழமை சனி இடம் பெயர்ந்தார். இதையடுத்து உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் சனிப்பெயர்ச்சியைக்கொண்டாடினர்.
சனீஸ்வரனுக்கு ஆலயம் உள்ள திருநள்ளாரில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. அங்கு சனீஸ்வர பகவான் ஆலயத்தில் உள்ள நள தீர்த்தத்தில் சுமார் 5 லட்சம்பக்தர்கள் புனித நீராடினர்.
ரிஷப ராசிக்கு சனி பகவான் இடம் பெயர்ந்த வியாழக்கிழமை மாலை 4 மணிக்கு சிறப்பு தீபாராதனை செய்யப்பட்டது. மூலவருக்கு தங்கக் கவசம்அணிவிக்கப்பட்டிருந்தது.
இந்த விழாவில் புதுவை துணை நிலை ஆளுநர் ரஜினி ராய், புதுவை முதல்வர் சண்முகம் மற்றும் அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.
சனிப் பெயர்ச்சியையொட்டி திருநள்ளாருக்கு அனைத்து விதமான போக்குவரத்து வசதிகளும் செய்யப்பட்டிருந்ததால், நாடு முழுவதும் இருந்தும்லட்சக்கணக்கான பக்தர்கள் திருநள்ளாருக்கு வந்திருந்தனர்.












Click it and Unblock the Notifications