For Daily Alerts
Just In
38 ஆண்டுகளாக இந்திய சிறையில் அடைபட்டிருக்கும் சீனர்கள்
பாண்டிச்சேரி:
இந்திய சிறையில் கடந்த 38 ஆணடுகளாக அடைக்கப்பட்டுள்ள 2 சீன போர்க் கைதிகளை உடனே விடுவிக்கவேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த விஷயத்தில் குடியரசுத் தலைவர் நாராயணன் உடனே தலையிட வேண்டும் என பாண்டிச்சேரி யூனியன்பிரதேச திமுக, த.மா,க, ஜனதா தளம், திராவிட பேரவை, சமதா கட்சி, மதிமுக, ஜனதா கட்சி, சி.பி.ஐ. (எம்.எல்.)ஆகியவை கூட்டாக கோரிக்கை விடுத்துள்ளன.
இந்தக் கட்சிகள் வெளியிட்ட அறிக்கையில், யுங் சிலாங், சிப்லாங் ஆகிய இந்த இருவரும் போர்க் கைதிகளாகராஞ்சி சிறையில் அடைக்கப்பட்டு 38 ஆண்டுகள் ஆகிவிட்டன.
38 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளதால் அவர்களின் மனநிலை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால்,அவர்கள் ராஞ்சியில் மன நல மையத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
Comments
Story first published: Tuesday, August 8, 2000, 5:30 [IST]