தமிழ் தீவிரவாத இயக்கங்களால் பலம் பெற்ற வீரப்பன்
ஈரோடு:
வீரப்பன் விடுவிக்கக் கோரியுள்ள 5 பேரும் தமிழ்த் தீவிரவாத இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் என்பதுதெரியவந்துள்ளது. தமிழ்த் தீவிரவாத இயக்கங்களின் ஆதரவால் வீரப்பனின் பலம் அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது.
கொடூரமான பல கொலைகளைச் செய்து காட்டில் தலைமறைவாக வாழ்க்கை நடத்திக் கொண்டிருந்த வீரப்பனுடன்அவனுடைய கூட்டாளிகள் கொஞ்சம் பேரே இருந்தனர்.
இவர்களில் வீரப்பன் தம்பி உட்பட சிலரைப் போலீசார் கைது செய்தனர். சிலர் கர்நாடக மாநில போலீசார் கைதுசெய்து தடா சட்டத்தில் அடைத்தனர். தமிழகத்தில் கோவை சிறையில் அடைக்கப்பட்டிருந்த வீரப்பனின் தம்பிஉட்பட சிலர், கர்நாடக மாநிலத்தில் ஒரு வழக்கிற்காக அழைத்துச் செல்லப்பட்டிருந்தபோது தற்கொலை செய்துகொண்டனர். அவர்கள் கர்நாடக போலீசாரால் கொல்லப்பட்டதாக வீரப்பன் கூறுகிறார்.
ஒரு காலக் கட்டத்தில் வீரப்பனின் கூட்டாளிகளின் எண்ணிக்கை மிகவும் குறைந்து 5 பேர் என்ற அளவிலேயேஇருந்தது. ஆனால், தற்போது வீரப்பன் பலம் அதிகரித்துள்ளது.
தமிழ்த் தீவிரவாதக் குழுக்களின் தொடர்பால் வீரப்பனுக்கு பல வகைகளில் உதவி கிடைத்துள்ளது. ஆயுதங்கள் கூடஇவர்கள் மூலம் வீரப்பனுக்கு சப்ளை செய்யப்பட்டுள்ளது.
மேலும், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மலையோரங்களில் உள்ள போலீஸ் நிலையங்களில் ஆயுதங்களைக்கொள்ளையடிக்க இந்த குழுக்கள் திட்டமிட்டன.
இதன் ஒரு கட்டமாகவே, வெள்ளித் திருப்பூரில் உள்ள போலீஸ் ஸ்டேஷனில், போலீசைக் கட்டிப் போட்டுஆயுதங்களைக் கொள்ளையடித்தனர். இதில், வீரப்பன் கூட்டாளிகளுக்கும் பங்கு இருந்தது.
இந்தக் கொள்ளையில் மாறன் என்பவர் தலைமையிலான தமிழ்நாடு விடுதலைப் படை என்ற தீவிரவாதஇயக்கத்திற்கு தொடர்பு இருந்தது.
தமிழகத்தின் பல்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள வெங்கடேசன், பொன்னி வளவன், சத்தியர்த்தி,மணிகண்டன், முத்துக்குமார் ஆகிய 5 பேரையும் வீரப்பன் இப்போது விடுவிக்கக் கோரியுள்ளான்.
இதில் 2 பேர் தமிழ்நிாடு விடுதலைப் படையைச் சேர்ந்தவர்கள். 3 பேர் தமிழ்தேசிய மீட்புப் படை என்றஅமைப்பைச் சேர்ந்தவர்கள்.
இந்த 5 பேரும் பல்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும், வீரப்பனுக்கும் விடுதலைப் புலிகளுக்கும்தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.
ஓரிரு ஆண்டுகளுக்கு முன்பு, விடுதலைப் புலிகளின் அமைப்பைச் சேர்ந்த ஒருவர், வீரப்பனுடன் தொடர்புகொண்டிருப்பது தெரியவந்தது. இது தவிர, தற்போது இரு மாநில அரசுகளுக்கும் விடுக்கப்பட்டுள்ள 10கோரிக்கைகளும் மிக மிக யோசித்து நக்ஸல்களின் கோரிக்கைகள் போன்று அமைந்துள்ளன.
வீரப்பனால் இதுபோன்ற கோரிக்கைகளையும் நிபந்தனைகளையும் விதிக்க முடியுமா என்பது மிகுந்தசந்தேகத்துக்குரியது. எனவே, வீரப்பனுக்கும் தீவிரவாத இயக்கங்களுக்கும் உள்ள தொடர்புஉறுதிப்படுத்தப்பட்டுள்ளது.