பெங்களூர் திருவள்ளுவர் சிலை திறப்பு குறித்து கர்நாடக முதல்வர் ஆலோசனை
பெங்களூர்:
பெங்களூரில் அல்சூர் ஏரிக்கரையில் வைக்கப்பட்டுள்ள திருவள்ளுவரின் சிலையைதிறப்பது குறித்து முதல்வர் கிருஷ்ணா பல்வேறு அமைப்புகள், அறிஞர்களுடன்ஆலோசனை நடத்தினார்.
இந்தக் கூட்டத்தில் கர்நாடகத்தில் உள்ள முக்கிய புள்ளிகளுக்கு பாதுகாப்பு வழங்கவேண்டும் முதல்வருக்கு பல அமைப்புகள் கோரிக்கை விடுத்தன.
ஞராஜ்குமார் கடத்தப்பட்ட சம்பவம் குறித்தும், அவரை மீட்க எடுக்கப்பட்டுள்ளநடவடிக்கைகள் குறித்தும் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த அறிஞர்கள், கர்நாடகமுதல்வர் கிருஷ்ணா செவ்வாய்க்கிழமை ஆலோசனை நடத்தினார்.
பிரபல கன்னட நடிகர் ராஜ்குமார் சந்தனக் கடத்தல் வீரப்பனால் கடந்த வாரம் கடந்தவாரம் கடத்தப்பட்டார்.
அது குறித்து இன்று கர்நாடக முதல்வர் கிருஷ்ணா கூட்டம் நடத்தினார். அதன் பின்நிருபர்களிடம் பேசிய கன்னட மேம்பாட்டுக்குழு அதிகாரி பர்கூர் ராமச்சந்திரப்பாராஜ்குமாரையும் அவருடன் கடத்தப்பட்ட மூவரையும் விடுவிப்பதற்காகஎடுக்கப்பட்டுள்ள முயற்சிகள் பற்றி முதல்வர் விவரித்தார் எனக் கூறினார்.
கர்நாடகத்தில் உள்ள முக்கிய பரபலங்கள் அனைவருக்கும் பாதுகாப்பு அளிக்கப்படவேண்டும் என இந்தக் கூட்டத்தில் முதல்வரிடம் கேட்டுக் கொள்ளப்பட்டது
இந்தக் கூட்டத்தில், தமிழை பள்ளிகளில் இரண்டாவது மொழியாக ஆக்குவதுபற்றியும். திருவள்ளுவர் சிலையை பெங்களூரில் திறப்பது குறித்தும்விவாதிக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications