கோபாலிடம் வீடியோ கேசட் கொடுத்தனுப்பினார் வீரப்பன்
சென்னை:
அரசுத் தூதராக வீரப்பனைச் சந்திக்க காட்டிற்கு சென்ற கோபால், இன்று காலைசென்னைக்குத் திரும்பினார்.
மதியம் 12 மணிக்கு, தமிழ்நாடு தலைமைச் செயலகத்திற்கு வந்தார் நக்கீரன் கோபால்.அவருடன் நக்கீரன் துணை ஆசிரியர் காமராஜும் வந்திருந்தார்.
இருவரும் தமிழக முதல்வர் கருணாநிதியை சந்தித்துப் பேசினார்கள். ஒன்றரைமணிநேரம் நடந்த சந்திப்பிற்கு பின்பு, வெளியே வந்த கோபால் நிருபர்களிடம்கூறியதாவது:
வீரப்பனை காட்டிற்குள் சந்தித்துப் பேசினேன். வீரப்பன் கோரிக்கைகளுக்காக அரசுகொடுத்த கோரிக்கைகளையும் வீரப்பனிடம் எடுத்துச் சொன்னேன்.
வீரப்பன் கோரிக்கைகளில் சில திருந்தங்கள் கேட்டார். அது பற்றி முதல்வரிடம்சொல்லியிருக்கிறேன். இன்று மாலை ஆறு மணிக்கு, நிருபர்களை சந்திக்கிறேன்.அப்பொழுது வீரப்பனுடன் எடுத்த வீடியோ படத்தையும் போட்டுக் காட்டுகிறேன்என்றார்.
சென்னை விரைகிறார் கிருஷ்ணா:
அதன்பிறகு, நிருபர்களிடம் முதல்வர் கருணாநிதியிடம் கூறியதாவது:
வீரப்பன் தரப்பிலிருந்து வந்த கோரிக்கைகளுக்கு அரசு அனுப்பிய கோரிக்கைகளில்சில திருத்தங்கள் வேண்டும் என்று வீரப்பன் சொல்லியிருப்பது பற்றி கோபால்சொன்னார். அந்த கேசட்டையும் போட்டுக் கேட்டோம்.
இன்று மாலை 4 மணிக்கு கர்நாடக முதல்வர் கிருஷ்னா சென்னைக்கு வருகிறார். அவர்வந்தவுடன் அவரிடம் கலந்து பேசி முடிவு எடுப்போம் என்று தெரிவித்தார் தமிழகமுதல்வர் கருணாநிதி.