For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழகத்தில் 420 கி.மீ. தேசிய நெடுஞ்சாலை அமைக்கும் ரஷ்ய நிறுவனங்கள்

By Staff
Google Oneindia Tamil News

மாஸ்கோ:

தமிழகத்தில் நவீன ரக சாலைகள் அமைக்கும் பணியில் ரஷ்ய நிறுவனங்கள் ஈடுபடுவுள்ளன.

ரஷ்யாவின் முன்னணி நிறுவனங்களான டையஸ்ப்ரோமெக்ஸ்போர்ட் மற்றும் சென்ட்ரோடோஸ்ட்ரோய்ஆகியவை தமிழ்நாடு, குஜராத், உத்தரப் பிரதேசம், பிகார், ஒரிஸ்ஸாவில் சாலைகள் அமைக்கும் பணியில் ஈடுபடஉள்ளன.

கூடலூரில் இருந்து ஜெயம்கொண்டசோழபுரம் இடையே சுமார் 420 கி.மீ நீளமுள்ள தேசிய நெடுஞ்சாலையைஇந்த நிறுவனங்கள் அகலப்படுத்தி, சீரமைக்க உள்ளன.

இது தவிர பழைய தேசிய நெடுஞ்சாலைகளை சீரமைக்கவும் அவை முன் வந்துள்ளன. பிகார், உத்தரப் பிரதேசத்தில்490 கி.மீ. நீள சாலைகள் அமைக்கும் பணிக்கான ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டுவிட்டது. இந்திய தேசியநெடுஞ்சாலைகள் ஆணையத்தின் கண்காணிப்பின் கீழ் இந்தப் பணி மேற்கொள்ளப்படும்.

இது தவிர ஒரிஸ்ஸாவில் 200 கி.மீ. நீளத்துக்கு தேசிய நெடுஞ்சாலையை இந்த நிறுவனங்கள் அமைக்கும். இதன்மூலம் இந்த மாநிலத்தின் மேற்கு-கிழக்கு பகுதிகளுக்கு இடையிலான சாலைப் போக்குவரத்து சீராகும்.

குஜராத்தில் 50 கி.மீ. நீளமுள்ள சாலையையும் இந்த நிறுவனங்கள் சீரமைக்கும்.

இந்தப் பணிகளுக்காக இந்த 2 ரஷ்ய நிறுவனங்களும் இந்தியாவின் முகுந்த் நிறுவனத்துடன் இணைந்து ஒரு கூட்டுநிறுவனத்தை உருவாக்க உள்ளன. இதில் டையஸ்ப்ரோமெக்ஸ்போர்ட் நிறுவனம் இந்தியாவில் ஏற்கனவே பலதொழிற்சாலைகளை அமைத்துள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X