தமிழக விடுதலைப் போராட்ட வீரர்கள் குறித்த நூலுக்கு சர்வதேச அங்கீகாரம்
ஈரோடு:
விடுதலை வேள்வியில் தமிழகம் என்ற நூலுக்கு சர்வதேசத் தரம் வாய்ந்த நூலுக்கான அங்கீகாரம் கிடைத்துள்ளது.
ஈரோட்டைச் சேர்ந்த டி.ஸ்டாலின் குணசேகரன் என்பவர், தமிழகத்தைச் சேர்ந்தவர்களின் விடுதலைப் போராட்டம்குறித்து எழுதியுள்ளார். நூறுக்கும் மேற்பட்டோரின் போராட்ட வரலாறு குறித்து இந்த நூலில் இடம் பெற்றுள்ளது.
நூல் வெளியிடுவதற்கு முன்பே, இதற்கு சர்வதேச அளவிலான தரம் வாய்ந்த நூல் என்ற அங்கீகாரத்தை மத்தியமனிதவள மேம்பாட்டுத் துறை வழங்கியுள்ளது. "விடுதலை வேள்வியில் தமிழகம் என்ற இந்நூலில், புலித்தேவன்ஆட்சி காலத்திலிருந்து நாடு விடுதலை அடையும் நாள் வரையிலான போராட்ட காலங்கள் சித்தரிக்கப்பட்டுள்ளது.
புலித்தேவன், அமரசிம்மன், முத்துராமலிங்க சேதுபதி, வாஞ்சிநாதன், வ.உ.சிதம்பரனார், பாரதியார் உட்படபல்வேறு முக்கியத் தலைவர்களின் போராட்ட கால வரலாறு இதில் தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. இதற்கு முன்,இது போன்ற நூல் வெளியிடப்படவில்லை.