மதுரையில் ரூ.2.6 கோடியில் எர்த் ஸ்டேஷன்
மதுரை:
மதுரையில் ரூ. 2.6 கோடி செலவில் செயற்கைக்கோள் தரைக் கட்டுப்பாட்டு மையம் (எர்த் ஸ்டேஷன்) அமைக்கப்படவுள்ளது.
இத் தகவலை சென்னையில் உள்ள சாப்ட்வேர் டெக்னாலஜி பார்க்ஸ் ஆஃப் இந்தியா இயக்குநர் ராஜலட்சுமி தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது:
1600 சதுர அடி நிலப்பரப்பில் இச் செயற்கைக்கோள் தரைக் கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட உள்ளது. இதற்காக ஒரு ஏக்கர் நிலப்பரப்பைமதுரையில் உள்ள தியாகராஜர் பொறியியல் கல்லூரி வழங்கும்.
சுமார் ரூ. 2.6 கோடி செலவில் வரும் டிசம்பருக்குள் இம் மையம் உருவாக்கப்படும். இது தொடர்பான ஒப்பந்தம் சாப்ட்வேர் டெக்னாலஜி பார்க்ஸ் ஆஃப்இந்தியாவுக்கும் தியாகராஜர் பொறியியல் கல்லூரிக்கும் இடையே வெள்ளிக்கிழமை கையெழுத்தானது.
இதே போல் மற்றொரு செயற்கைக்கோள் தரைக் கட்டுப்பாட்டு மையம் திருச்சியில் டிசம்பர் மாதத்துக்குள் நிறுவப்படும். சுமார் 1000 சதுர அடிபரப்பளவில் அமைய உள்ள இம் மையத்துக்கான நிலப்பரப்பு தொடர்பான ஒப்பந்தம் ஏற்கெனவே கையெழுத்தாகிவிட்டது.
தமிழகத்தின் இரண்டாவது செயற்கைக்கோள் தரைக் கட்டுப்பாட்டு மையம் சென்னையில் அடுத்த சில வாரங்களில் செயல்படத் துவங்கும். தமிழகத்தின் முதல்செயற்கைக்கோள் தரைக்கட்டுப்பாட்டு மையம் கோயம்புத்தூரில் 1999-ம் ஆண்டு நிறுவப்பட்டது என்றார் ராஜலட்சுமி.
யு.என்.ஐ.