மின் உற்பத்தியில் தமிழகம் கிடுகிடு வளர்ச்சி
சென்னை:
மின் உற்பத்தியில் தமிழகம் கிடுகிடு வளர்ச்சியைப் பெற்றுள்ளது என்று மத்தியபெட்ரோலியத் துறை இணை அமைச்சர் பொன்னுசாமி தெரிவித்தார்.
சென்னையில் நடைபெற்ற சிறு தொழில்கள் பற்றிய கருத்தரங்கில் அவர் பேசியதாவது:
தொழில் வளர்ச்சியில் இந்தியாவிலேயே தமிழகம் வேகமான முன்னேற்றத்தைஅடைந்துள்ளது. மின் உற்பத்தியிலும் தமிழகம் கிடுகிடு வளர்ச்சியைக் கண்டுள்ளது.
பிளாஸ்டிக் தொழிலில் தமிழகம் போதுமான வளர்ச்சியைப் பெறவில்லை. பிளாஸ்டிக்கச்சாப் பொருட்களுக்கு மார்க்கெட்டில் நல்ல கிராக்கி உள்ளது. எனவே சிறுதொழில்அதிபர்கள் பிளாஸ்டிக் தொழிலில் அதிக ஆர்வம் காட்டவேண்டும்.
இந்தியாவில் 40 லட்சம் சிறு தொழிற்சாலைகள் உள்ளன. இவற்றை ஊக்குவிக்க மத்தியஅரசு பல்வேறு திட்டங்களை அமல்படுத்தியுள்ளது.
அரசு வங்கிகளில் கடனுதவி அளிக்கப்படுகிறது. சலுகைக் கட்டணத்தில் மின்சாரம்வழங்கப்படும். வரிச் சலுகையும் அளிக்கப்படும் என்றார் பொன்னுசாமி.
இக் கூட்டத்தில் தமிழக ஊரகத் தொழில் துறை அமைச்சர் ஐ. பெரியசாமி கலந்துகொண்டார். தமிழகத்தில் சிறு தொழில்களுக்கு அதிக ஊக்கம் அளிக்கப்பட்டுவருகிறது என்றார் அவர்.