For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நெட்வொர்க்கிங் மையம் அமைக்கிறது மகாலிங்கம் பொறியியல் கல்லூரி

By Staff
Google Oneindia Tamil News

பொள்ளாச்சி:

அக்ஸல் கம்ப்யூட்டர் நிறுவனத்துடன் டாக்டர் மகாலிங்கம் பொறியியல் கல்லூரி ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.

இந்த ஒப்பந்தத்தின் மூலம் பொள்ளாச்சியில் உள்ள மகாலிங்கம் பொறியியல் கல்லூரி வளாகத்துக்குள் கம்ப்யூட்டர் ஹார்டுவேர் சர்வீஸ் மற்றும்நெட்வொர்க்கிங் மையம் அமைக்கப்படும்.

வெள்ளிக்கிழமை நடந்த ஒப்பந்தம் கையெழுத்து நிகழ்ச்சிக்குப் பிறகு அக்ஸல் நிறுவனத் தலைவர் பணிக்கர் கூறியதாவது:

தற்போது கம்ப்யூட்டர் சாப்ட்வேர் தொழில்நுட்பத்துக்குத்தான் நாட்டில் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. ஹார்டுவேர் தொழில்நுட்பத்துக்கும்அதே அளவு முக்கியத்துவம் கொடுக்கவேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.

100 சாப்ட்வேர் பொறியாளர்கள் இருந்தால் அங்கு ஒரு ஹார்ட்வேரில் பயிற்சி பெற்ற தொழில்நுட்பப் பொறியாளரின் தேவை அவசியமாக உள்ளது. அந்தவகையில் ஹார்டுவேர் தொழில்நுட்பத்தில் அக்ஸல் நிறுவனம் கடந்த 10 ஆண்டுகளாக ஈடுபட்டு வருகிறது.

2008-ம் ஆண்டில் இந்தியாவின் தகவல் தொழில்நுட்பத் தொழில் வளர்ச்சி 3.52 லட்சம் கோடியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.அப்போது கம்ப்யூட்டர் துறையில் சாப்ட்வேர் மற்றும் ஹார்ட்வேர் பிரிவுகளில் பயிற்சி பெற்றவர்களின் தேவை அதிகமாக இருக்கும்.

இப்போது செய்து கொள்ளப்பட்டுள்ள ஒப்பந்தத்தின் மூலம் மகாலிங்கம் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு ஹார்டுவேர் பயிற்சி அளிக்கப்படும்.பயிற்சிக்குப் பிறகு அளிக்கப்படும் சான்றிதழ் உலகம் முழுவதும் ஏற்றுக் கொள்ளப்படும் வகையில் இருக்கும் என்றார் பணிக்கர்.

யு.என்.ஐ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X