மருத்துவ முகாம்கள் நடத்துகிறது அதிமுக
சென்னை:
அ.திமு.க சார்பில் 10 ஊர்களில் இலவச மருத்துவ முகாம்கள் நடத்தப்படுகின்றன.
செப்டம்பர் 9ம் தேதி முதல் 21ம் தேதி வரை இம்முகாம்கள் நடைபெறுகின்றன என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
இதுகுறித்து ஜெயலலிதா சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
அ.தி.மு.க. நிறுவனத் தலைவர் எம்.ஜி.ஆரின் 83-வது பிறந்த நாளையொட்டி கட்சியின் மருத்துவ அணியின் சார்பில் "மக்கள் நல இலவச மருத்துவமுகாம்கள்கடந்த ஜனவரி மாதம் முதல் நடைபெற்று வருகின்றன.
இந்த மருத்துவ முகாம்களில் பல்வேறு மருத்துவ நிபுணர்களைக் கொண்ட குழு, அனைத்து மக்களுக்கும் ஒரு முழுமையான மருத்துவப் பரிசோதனையும்,ஆலோசனையும் வழங்கி வருகிறது.
இதன் தொடர்ச்சியாக 10 நாடாளுமன்றத் தொகுதிகளுக்குட்பட்ட சட்டமன்றத் தொகுதிகளில் செப்டம்பர் 9-ம் தேதி முதல் அக்டோபர் 21ம் தேதி வரைஇலவச மருத்துவ முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
9-ம் தேதி கும்பகோணம், 10-ம் தேதி கிருஷ்ணராயபுரம், 23-ம் தேதி ஆண்டிப்பட்டி, 24-ம் தேதி அருப்புக்கோட்டை, 30-ம் தேதி திருவள்ளூர்,அக்டோபர் 7-ம் தேதி தாரமங்கலம், 8-ம் தேதி கோவை மேற்கு, 14-ம் தேதி நன்னிலம், 15-ம் தேதி திண்டிவனம், 21-ம் தேதி ராதாபுரம்ஆகிய ஊர்களில் மருத்துவ முகாம்கள் நடைபெறும்.
மருத்துவ அணியின் தலைவர் டாக்டர் மைத்ரேயன் தலைமையிலும், செயலாளர் டாக்டர் வேணுகோபால் முன்னிலையிலும் இவை நடைபெறும்.
இம்முகாம்களுக்கு கட்சியினர் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.